24 66303a9421c39
இலங்கைசெய்திகள்

மே தினத்திற்காக இலங்கை போக்குவரத்து சபையின் 1500 பேருந்துகள்

Share

மே தினத்திற்காக இலங்கை போக்குவரத்து சபையின் 1500 பேருந்துகள்

நாளை (1ஆம் திகதி) மே தினத்திற்காக இலங்கை போக்குவரத்து சபையிடம் 1500 பேருந்துகளை அரசியல் கட்சிகள் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் நேற்று (29 ஆம் திகதி) மாலை வரை இருநூறு பேருந்துகளுக்கு மாத்திரமே பணம் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பெரும்பாலும் பேருந்துகளை கோரியுள்ளன.

இலங்கை போக்குவரத்துச் சபையின் 107 டிப்போக்களின் கீழ் நான்காயிரத்து எழுநூறு பேருந்துகள் இயங்கி வருகின்றன.இதில் ஆயிரத்து ஐநூறு பேருந்துகளுக்கான கோரிக்கை கிடைத்துள்ளது.

இந்த பேருந்துகளை வழங்கும்போது, ​​அரசு சுற்றறிக்கையின்படி நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பேருந்துகளுக்கு செலுத்த வேண்டிய மொத்த தொகையை கட்டாயம் செலுத்த வேண்டும். முழுத் தொகையும் செலுத்தாமல் ஒரு பேருந்து கூட தரப்படாது என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
k d
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை.

இலங்கை மக்களுக்கு பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் வடமேல்...

G.L.Peiris
இலங்கை

அனைத்து மக்களும் ஒன்றிணைந்தால் சாத்தியம் என்கிறார் முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்

கூட்டு எதிரணியின் அரசியல் பிரமுகர்கள் சர்வமதத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர், இந்த நிலையில் இது...

dengue
இலங்கை

அதி அபாய மட்டத்தில் டெங்கு – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

2026 ஆம் வருடத்தில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 68,071 ஆக பதிவாகி உள்ளதாக...

money
இலங்கை

அதிரடியாக உயர்த்தப்பட்ட சில கட்டணங்கள்.

  வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ,...