24 66306e7ed48b9
இலங்கைசெய்திகள்

கர்தினால் மல்கம் ரஞ்சித்திடம் பாப்பரசர் பிரான்சிஸ் கோரிக்கை

Share

கர்தினால் மல்கம் ரஞ்சித்திடம் பாப்பரசர் பிரான்சிஸ் கோரிக்கை

ஓய்வுபெறும் வயதை எட்டிய போதிலும் கொழும்பு பேராயர் பதவியில் நீடிக்குமாறு கர்தினால் மல்கம் ரஞ்சித்திடம் (Cardinal Malcolm Ranjit) பாப்பரசர் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளதாக இலங்கை கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.

இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தேசிய தொடர்பாடல் பணிப்பாளர் ஜூட் கிரிசாந்த பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.

எனினும், கர்தினால் சேவை நீடிப்பு கோரியதாக கூறி அரசாங்க அமைச்சர் ஒருவரினால் நாடாளுமன்றத்தில் தவறான அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்நிலையில், கர்தினால் சேவை நீடிப்பை கோரவில்லை என அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மேலும், தாம் ஓய்வுபெறும் வயதை அடைந்துவிட்டதாக கர்தினால் ஒன்றரை வருடங்களுக்கு முன்பே வத்திக்கானுக்கு அறிவித்துவிட்டார்.

எனினும், கர்தினால் இன்னும் பணிபுரிய முடியும் என்பதால் அவரை பணியை தொடருமாறு பாப்பரசர் வேண்டுகோள் விடுத்ததாக தந்தை ஜூட் கிரிசாந்த பெர்னாண்டோ கூறியுள்ளார்.

கொழும்பில் உள்ள கத்தோலிக்க திருச்சபையும் கர்தினாலை கொழும்பு பேராயர் பதவியில் நீடிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 24
செய்திகள்உலகம்

ஈரான் போர் நிறுத்தம் கோருகிறது: ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் புதிய தலைமை (New Regime) அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கோரியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாளை நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: 24 மணி நேரப் போராட்டத்திற்கு GMOA அழைப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் தழுவிய ரீதியில் நாளை (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை...

Untitled 22
செய்திகள்இந்தியா

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இந்தியாவில் ஏடிஎஃப் மற்றும் வர்த்தக எரிவாயு விலைகள் உயர்வு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி செலவுகள் அதிகரித்துள்ள...

Untitled 21
செய்திகள்உலகம்

வானில் இன்று தோன்றும் ‘இளஞ்சிவப்பு நிலவு’: 50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கான மனிதப் பயணம் தொடக்கம்!

புதிய வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் வகையில், ஏப்ரல் மாதத்தின் முதல் முழு நிலவான ‘இளஞ்சிவப்பு...