24 662f3fda2887d
இலங்கைசெய்திகள்

நாட்டை விட்டு வெளியேறிய வைத்தியர்கள்: தாமதமாகும் நடவடிக்கை

Share

நாட்டை விட்டு வெளியேறிய வைத்தியர்கள்: தாமதமாகும் நடவடிக்கை

சிறிலங்கா சுகாதார அமைச்சின் அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறிய சுமார் 350 விசேட வைத்தியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ள போதிலும், அது பல மாதங்களாக தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனவரி 2022 முதல் இதுவரை 300 முதல் 350 வரையான விசேட மருத்துவர்கள் சுகாதார அமைச்சின் அனுமதியின்றி வெளிநாடு சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு பின்னரும் ஏழு விசேட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மொனராகலை, மஹியங்கனை, ஹம்பாந்தோட்டை போன்ற வைத்தியசாலைகளில் பணியாற்றிய வைத்தியர்களே இவ்வாறு வெளிநாடு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

விசேட வைத்தியர் ஒருவர் வெளிநாடு செல்லும்போது, ​​குறித்த வைத்தியர் விடுப்புக்கு முறையான அனுமதி அளித்துள்ளாரா என்பதை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பரிசோதிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

விசா வழங்கும் போது சட்ட நிலைமையை பரிசோதிக்க வேண்டிய போதிலும், நாட்டை விட்டு வெளியேறிய சில விசேட வைத்தியர்கள் சுகாதார அமைச்சின் சட்ட அனுமதியின்றி, முறையான விடுமுறை அனுமதியின்றி வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாடுகளுக்குச் சென்ற விசேட வைத்தியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு அறிவித்தும் இதுவரையில் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
1529934317 gun gunshot 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பத்தரமுல்லையில் பட்டப்பகலில் துப்பாக்கிச்சூடு! – ஜீப் வாகனத்தில் இருந்த தம்பதியினர் மர்மமான முறையில் சுட்டுக்கொலை!

கொழும்பு – பத்தரமுல்லை, அக்குரேகொட பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் தம்பதியினர்...

25 679d968d808df
இலங்கைசெய்திகள்

18 ஆண்டுகால நீதிப் போராட்டம்: வஸ்கடுவ கொலை வழக்கில் மூவருக்கு மரண தண்டனை!

குடா வஸ்கடுவ பகுதியில் 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற நபர் ஒருவரின் படுகொலை தொடர்பான வழக்கில்,...

26 69858a214d488
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இரசாயனப் பொருளை சுவாசித்த 19 பேர் பாதிப்பு! – மொரட்டுவை பாடசாலை மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!

மொரட்டுவை பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் இன்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வக சோதனையின் போது, வெளியேறிய இரசாயனப்...

1770972444 seine 6
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஜனாதிபதி செயலகத்திற்கு முன் 9-வது நாளாக மீனவர் போராட்டம்! – தீர்வு காண ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பு!

கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக, கொளுத்தும் வெயிலையும் பாரிய மழையையும் பொருட்படுத்தாது மீனவர்கள் முன்னெடுத்து...