Awas Gejolak Sosial 1200x798666 2 scaled
செய்திகள்இலங்கை

நாளை முதல் புதிய சுகாதார வழிகாட்டல்!

Share

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நாளை காலை 4 மணியுடன் நீக்கப்படவுள்ள நிலையில் நாளை முதல் அமுலாகும் புதிய சுகாதார வழிகாட்டல் வெளியாகியுள்ளது.

இந்த புதிய சுகாதார வழிகாட்டல் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி நாளை முதல் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார விதிமுறைகளாக

  • வீட்டிலிருந்து தொழில், மருத்துவமனை தேவைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  • வீடுகளில் நடத்தப்படும் விருந்துபசார நிகழ்வுகள் உள்ளிட்ட அனைத்து வகையான உள்ளக மற்றும் வெளியக விருந்துபசாரங்களும் எதிர்வரும் ஒக்ரோபர் 31 வரை அனுமதி வழங்கப்படமாட்டாது.

  • ஒன்றுகூடல்களுக்கு தொடர்ந்து தடைவிதிப்பு

  • பதிவுத் திருமணங்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் அதன்போத 10 பேருக்கு மாத்திரமே குறித்த திருமண வைபவத்தில் கலந்து கொள்ள அனுமதி

  • எதிர்வரும் 16ஆம் திகதிக்குப் பின் திருமண மண்டபங்களில் 50 பேருக்கு மேற்படாது மண்டப கொள்ளளவில் 25 சதவீதமானோரை உள்ளடக்கி திருமண வைபவங்கள் நடத்த பரிந்துரை

  • எனினும் இந்தத் திருமண நிகழ்வுகளில் மதுபான உபசாரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

  • மரணச் சடங்கில் கலந்து கொள்ள ஒரே தடவையில் 10 பேருக்கு மாத்திரமே அனுமதி

  • எதிர்வரும் 16 ஆம் திகதிக்குப் பின் மரண நிகழ்வு கலந்து கொள்ள 15 பேருக்கு அனுமதி வழங்கப்படும்.

  • சமய ஸ்தலங்கள், கூட்டுவழிபாடு மற்றும் கூட்டங்களுக்கு அனுமதி மறுப்பு.

  • பாடசாலைகள் 200 இற்கும் குறைவான மாணவர்களின் எண்ணிக்கை கொண்ட பாடசாலைகள் முதற்கட்டமாக திறக்க முடியும்.

  • பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் சுகாதார வழிகாட்டலுக்கமைய ஆரம்பிக்கலாம்.

  • அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களும் தினமும் இரவு 10 முதல் அதிகாலை 4 மணிவரை அனுமதிக்கப்படமாட்டது.

  • பொதுப் போக்குவரத்தில் ஆசன எண்ணிக்கைக்கு மாத்திரமே பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதி

  • முன்பள்ளிகளை 50 சதவீத மாணவர் கொள்ளளவை கொண்டு மேற்கொள்ள வேண்டும்.

  • பகல்நேர சிறுவர் பராமரிப்பு நிலையங்களைத் திறப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 172a2f580a
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதியின் அந்நியச் செலாவணி நிலைத்தன்மைக் கூற்றுக்கு ஆதாரமில்லை: புபுது ஜெயகொட குற்றச்சாட்டு!

இலங்கையின் இறக்குமதிகள் அதன் ஏற்றுமதி வருவாயை விட அதிகமாக வளர்ந்துள்ளதால், நாட்டின் செலுத்துமதி சமநிலை பற்றாக்குறை...

25 690d6d53c26d1
செய்திகள்அரசியல்இலங்கை

வைத்தியர் சமல் சஞ்சீவ விமர்சனம்: 2026 பட்ஜெட்டில் மருத்துவர்கள் புறக்கணிப்பு – விலங்கு நலனுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டது

மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டணியின் தலைவரான வைத்தியர் சமல் சஞ்சீவ, 2026ஆம்...

25 690b4dc55879b
அரசியல்இலங்கைசெய்திகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்படுவது குறித்துப் பங்காளிக் கட்சிகளுடன் பேசியே முடிவெடுப்போம்: ரெலோ அறிவிப்பு!

மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் (Tamil National Alliance – TNA) செயற்படுவது தொடர்பில், பங்காளிக்...

l78020250411143138 1296x700 1
செய்திகள்உலகம்

சீனா-அமெரிக்கா வர்த்தகப் பதற்றம் தணிப்பு: முக்கிய உலோகங்கள் மீதான ஏற்றுமதி தடை தற்காலிக நீக்கம் – கிராஃபைட் கட்டுப்பாடுகளும் நிறுத்தம்!

சீனா, அமெரிக்காவுக்கான முக்கிய உலோகங்கள் மீதான தனது ஏற்றுமதித் தடையை தற்காலிகமாக நீக்கியுள்ளது. இந்த நடவடிக்கை,...