இந்தியா-மேகாலயா மாநில ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
பேருந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்தே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இன்று அதிகாலை இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்பொழுது குறித்த பேருந்து நோங்ச்ராம் பாலத்தில் இருந்து ரிங்டி ஆற்றில் விழுந்துள்ளது.
இப் பேருந்தில் 21 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
இதன் போது, பேருந்து ஓட்டுநர் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்கைகளுக்காக அனுப்பியுள்ளனர்.
Leave a comment