24 662dd6df07f0c
இலங்கைசெய்திகள்

எரிபொருள் விலையில் மாற்றம்: இலக்கு வைக்கப்படும் தேர்தல்

Share

எரிபொருள் விலையில் மாற்றம்: இலக்கு வைக்கப்படும் தேர்தல்

இலாப வரம்பில் நெகிழ்வுத்தன்மையை அனுமதிக்கும் வகையில், மாதத்திற்கு ஒருமுறை எரிபொருளின் விலையை நிர்ணயிக்கும்விதமாக எரிபொருள் விலை சூத்திரத்தை மாற்றியுள்ளதாக, எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி. வி சானக்க(D.V. Chanaka) தெரிவித்துள்ளார்.

இதன்படி எரிபொருள் சில்லறை விற்பனையாளர்கள் தங்கள் இலாப வரம்பை 0-4 சதவீதத்தில் இருந்து தேர்வு செய்யலாம் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த வருட இறுதியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக இந்த நிலையான இலாப வரம்பு 4 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

எனினும் இலங்கை கடந்த முறை மார்ச் 31 ஆம் திகதி விலையை திருத்திய போது பரவலாக பயன்படுத்தப்படும் ஒக்டேன் 92 மற்றும் டீசல் ஆகியவற்றின் விலையை மாற்றவில்லை.

மேலும், தனியார் எரிபொருள் சில்லறை விற்பனையாளர்களான லங்கா இந்தியன் ஒயில் கோர்ப்பரேசன் மற்றும் சினோபெக் ஆகியவை பொதுவாக அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலையை பின்பற்றுகின்றன என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
articles2FnSTUZZcRP8myiGgD1k41
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாவற்குழியில் மணல் டிப்பர் விபத்து: கிளிநொச்சியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – மன்னார் வீதியின் தென்மராட்சி, நாவற்குழி பகுதியில் இன்று (15) அதிகாலை இடம்பெற்ற கோர...

image b42613d114
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொரள்ளை தேவாலய குண்டு வைப்பு: மீண்டும் விசாரணையை ஆரம்பியுங்கள் – கத்தோலிக்க திருச்சபை அரசாங்கத்திடம் வலியுறுத்தல்!

கொழும்பு, பொரள்ளையில் அமைந்துள்ள அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் (All Saints’ Church) வெடிகுண்டு வைக்கப்பட்ட சம்பவத்தின்...

1768450480 israel 6
செய்திகள்உலகம்

இஸ்ரேல் வாழ் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு: தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனத் தூதரகம் அறிவுறுத்தல்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு...

MediaFile 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி முகத்திடலில் பரபரப்பு: மின்கம்பத்தில் ஏறி நபர் ஒருவர் போராட்டம்!

கொழும்பு, காலி முகத்திடல் (Galle Face) வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர்...