24 662dc6bf82cac
இலங்கைசெய்திகள்

ரூபாவின் பெறுமதி மாற்றத்தால் இலங்கைக்கு கிடைத்துள்ள நன்மை

Share

ரூபாவின் பெறுமதி மாற்றத்தால் இலங்கைக்கு கிடைத்துள்ள நன்மை

கடந்த ஜனவரி மாதத்திலிருந்து இலங்கை ரூபாயின் பெறுமதி சுமார் 7 வீதத்தால் வலுவடைந்துள்ளமையால் நாட்டுக்கு நன்மை ஏற்பட்டுள்ளது.

ரூபாயின் பெறுமதி வலுவடைந்ததால் இலங்கை செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன் தொகை 0.25 டிரில்லியன் ரூபா அல்லது சுமார் 25,000 கோடி ரூபாவால் குறையும் என பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் அமிந்த மெத்சிலா பெரேரா தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் இறுதிவரை நாம் செலுத்த வேண்டிய மொத்தக் கடனின் பெறுமதி சுமார் 8 டிரில்லியன் ரூபாவாகும். அதில் 45 வீதம் நேரடி வெளிநாட்டுக் கடனாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அந்தத் தொகை 3.65 டிரில்லியன் ரூபாயாகும்.

இது தோராயமாக 7 சதவீதம் குறைக்கப்படும் போது, ​​நிலுவையில் உள்ள வெளிநாட்டு கடனின் ரூபாய் மதிப்பு 3.40 டிரில்லியனாக குறைகிறது.

எதிர்காலத்தில் ரூபாவின் மதிப்பு தொடர்ந்து வலுவடையும் போது இந்தத் தொகை மேலும் குறையும் என பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க டொலருக்கு செலுத்த வேண்டிய ரூபாயின் பெறுமதி ஆண்டின் தொடக்கத்தில் 360 ரூபாயாக இருந்த தொகை ஏப்ரல் இறுதிக்குள் 300 ரூபாய் வரை குறைந்துள்ளது.

ஆனால் நாம் செலுத்த வேண்டிய டொலர் தொகையில் ஒரு போதும் குறைவு ஏற்படாதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...