24 662c48a45e201
இலங்கைசெய்திகள்

ஓடும் தொடருந்தில் ஏற முற்பட்ட பெண்களுக்கு நேர்ந்த கதி! கொழும்பில் அதிர்ச்சி

Share

ஓடும் தொடருந்தில் ஏற முற்பட்ட பெண்களுக்கு நேர்ந்த கதி! கொழும்பில் அதிர்ச்சி

ஓடும் தொடருந்தில் ஏற முற்பட்ட இரண்டு பெண்கள் இரண்டு தொடருந்து பெட்டிகளுக்கு இடையில் சிக்கி கொண்டதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

கண்டி நோக்கிச் செல்லும் கொழும்பு தொடருந்து, நேற்று மாலை 4:35 மணியளவில், பயணிகள் ஏறுவதற்காக நிறுத்தப்பட வேண்டிய கொழும்பு கோட்டை நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தபோது,தொடருந்து நிறுத்துவதற்கு முன்பே அதில் ஏற முற்பட்ட போதே இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கிய இரு பெண்களும் பலத்த காயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

தொடருந்து பெட்டிகளுக்கு இடையே இருந்து பெண்களை விடுவிப்பதற்காக கோட்டை நிலையத்தில் மக்கள் மற்றும் தொடருந்து திணைக்கள ஊழியர்கள் இணைந்து ஒரு பெரிய மீட்பு முயற்சியை மேற்கொண்டதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...