24 662c48a45e201
இலங்கைசெய்திகள்

ஓடும் தொடருந்தில் ஏற முற்பட்ட பெண்களுக்கு நேர்ந்த கதி! கொழும்பில் அதிர்ச்சி

Share

ஓடும் தொடருந்தில் ஏற முற்பட்ட பெண்களுக்கு நேர்ந்த கதி! கொழும்பில் அதிர்ச்சி

ஓடும் தொடருந்தில் ஏற முற்பட்ட இரண்டு பெண்கள் இரண்டு தொடருந்து பெட்டிகளுக்கு இடையில் சிக்கி கொண்டதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

கண்டி நோக்கிச் செல்லும் கொழும்பு தொடருந்து, நேற்று மாலை 4:35 மணியளவில், பயணிகள் ஏறுவதற்காக நிறுத்தப்பட வேண்டிய கொழும்பு கோட்டை நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தபோது,தொடருந்து நிறுத்துவதற்கு முன்பே அதில் ஏற முற்பட்ட போதே இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கிய இரு பெண்களும் பலத்த காயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

தொடருந்து பெட்டிகளுக்கு இடையே இருந்து பெண்களை விடுவிப்பதற்காக கோட்டை நிலையத்தில் மக்கள் மற்றும் தொடருந்து திணைக்கள ஊழியர்கள் இணைந்து ஒரு பெரிய மீட்பு முயற்சியை மேற்கொண்டதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
k d
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை.

இலங்கை மக்களுக்கு பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் வடமேல்...

G.L.Peiris
இலங்கை

அனைத்து மக்களும் ஒன்றிணைந்தால் சாத்தியம் என்கிறார் முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்

கூட்டு எதிரணியின் அரசியல் பிரமுகர்கள் சர்வமதத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர், இந்த நிலையில் இது...

dengue
இலங்கை

அதி அபாய மட்டத்தில் டெங்கு – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

2026 ஆம் வருடத்தில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 68,071 ஆக பதிவாகி உள்ளதாக...

money
இலங்கை

அதிரடியாக உயர்த்தப்பட்ட சில கட்டணங்கள்.

  வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ,...