24 6629b3846c480
இலங்கைசெய்திகள்

பெண்ணொருவரின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்ட பொலிஸாரின் துப்பாக்கி

Share

பெண்ணொருவரின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்ட பொலிஸாரின் துப்பாக்கி

மாத்தளை – வில்கமுவ பொலிஸ் நிலையத்தில் இரவு வேளையில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கி காணாமல்போய் ஒரு மாதத்தின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வில்கமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் 26 ஆம் திகதி இரவு காணாமல் போன குறித்த துப்பாக்கி நுககொல்ல பிரதேசத்திலுள்ள வர்த்தக பகுதியொன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த பகுதியில் துப்பாக்கியை கண்ட பெண் ஒருவர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர், ஹசலக பொலிஸாரின் உத்தியோகபூர்வ நாயான ‘ரோக்கின்’ உதவியுடன், துப்பாக்கியை சுற்றியுள்ள பகுதி சோதனை செய்யப்பட்டுள்ளது.

இதன் பின்னர் இந்த துப்பாக்கி வில்கமுவ பொலிஸாரின் காணாமல் போன துப்பாக்கி என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Share
தொடர்புடையது
Motorcycle Accidnet
இலங்கை

இளைஞரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்.

களுத்துறை மாவட்டம், மில்லேவ பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய...

eids
இலங்கை

இலங்கையில் பரவலடையும் நோய்கள் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை.

  நாட்டில் எய்ட்ஸ் அல்லாத பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் நோய்த்தொற்றுகள்  பதிவாகியுள்ளதுடன் , குறித்த நோயாளிகள்...

negambo
இலங்கை

அனுர அரசை கவிழ்க்க சிறையில் தீட்டப்பட்ட சதித்திட்டம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்கும் மாபெரும் சதித் திட்டம் ஏதாவது நீர்கொழும்பு சிறைச்சாலையில்...

preschool kids
இலங்கை

அனைவரும் சமம் – அரசாங்கம் கொண்டுவரும் சிறந்த திட்டம்.

  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் கலந்து...