24 66270e390b750
இலங்கைசெய்திகள்

ஈரான் ஜனாதிபதியின் வருகைக்காக இலங்கை நடவடிக்கை

Share

ஈரான் ஜனாதிபதியின் வருகைக்காக இலங்கை நடவடிக்கை

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் வருகைக்காக அதியுச்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மத்தளையிலிருந்து உமாஓவா வரையிலும் கட்டுநாயக்காவிலிருந்து கொழும்பு வரையான 172 கிலோமீற்றர் தரைவழியான பயணத்திற்கு இராணுவத்தினர் மற்றும் பொலிஸாருடன் பலத்த பாதுகாப்பை நிலைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்று பாகிஸ்தானுக்கு விஜயம் செய்த ஈரான் ஜனாதிபதி, நாளை காலை மத்தளை விமான நிலையம் ஊடாக நாட்டை வந்தடையவுள்ளார்.

அங்கிருந்து தரை மார்க்கமாக 141 கிலோமீற்றர் தூரம் சென்று உமாஓயா திட்டத்தை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

அங்கிருந்து மீண்டும் மத்தளைக்கு வந்து விசேட விமானம் மூலம் மத்தளையில் இருந்து கட்டுநாயக்கவிற்கு செல்லவுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து 31 கிலோமீற்றர் தொலைவில் கொழும்பு சென்றடைந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன் பின்னர் தரைவழியாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்குத் திரும்பும் ஈரான் ஜனாதிபதி, நாளைய தினமே நாட்டை விட்டு வெளியேறவுள்ளார்.

ஈரானிய ஜனாதிபதி மற்றும் முப்படையினரின் பாதுகாப்பை ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் வழங்குவார்கள் என சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டின் வேலையின்மை விகிதம் 3.8% ஆகக் குறைந்தது: 365,951 பேர் வேலையில்லாமல் உள்ளனர் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

நாட்டில் தற்போது 365,951 பேர் வேலையில்லாமல் இருப்பதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (நவம்பர் 26)...

articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...