24 6624012f72536
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் புகையிலை பாவனைக்கு விரைவில் தடை

Share

பிரித்தானியாவில் புகையிலை பாவனைக்கு விரைவில் தடை

பிரித்தானியாவில்(UK) 15 வயதுக்கு குறைவான சிறுவர்களுக்கு புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வது விரைவில் தடைசெய்யப்படலாம் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பிலான புதிய சட்டமூலம் மீது பிரித்தானிய நாடாளுமன்றில் வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த சட்டம், புகை பிடிக்காத முதல் தலைமுறையை உருவாக்கக் வழிவகுக்கும் என்று அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், சட்டம் நடைமுறைக்கு வந்தால் இந்த ஆண்டு 15 வயதை அடையவுள்ள அல்லது அதற்கும் குறைவான வயதுடைய இளையர்கள் ஒருபோதும் புகையிலைப் பொருள்களை வாங்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனாக் (Rishi Sunak) கடந்த ஆண்டு புகையிலை பாவனை தொடர்பில் புதிய கொள்கைகளை அறிவித்திருந்தார்.

இங்கிலாந்தில் சிகரெட் வாங்கச் சட்டப்படி அனுமதிக்கப்படும் வயது வரம்பு ஒவ்வோர் ஆண்டும் உயர்த்தப்படும் என அவர் கூறியிருந்தார்.

இங்கிலாந்தில் தற்போது 18 வயதுக்குக் குறைவானவர்களுக்குச் சிகரெட்டுகளையோ, புகையிலைப் பொருள்களையோ விற்பது சட்டப்படி குற்றமாகும்.

மேலும் இளையர்கள் மின் சிகரெட்டுகள் பயன்படுத்துவதைத் தடுக்கும் நடவடிக்கைகளும் புதிய சட்டத்தின்கீழ் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
30
செய்திகள்இந்தியா

உலகத் தலைவர்களில் முதலிடம் பிடித்து மோடி வரலாற்றுச் சாதனை!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில்  100 மில்லியன் (10 கோடி) பின்தொடர்பாளர்களை...

29
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் – 20 ஓவர்களில் 256 ஓட்டங்கள் குவிப்பு!

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில் இன்று நடைபெற்று வரும் முக்கியமான போட்டியில்,...

28
அரசியல்இலங்கைசெய்திகள்

“சுரேஷ் சலேயின் கைது ஒரு கண்துடைப்பு”: அரசாங்கம் மீது சரத் வீரசேகர கடும் தாக்குதல்!

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கைது என்பது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களையும் கத்தோலிக்க...

27
செய்திகள்உலகம்

அமெரிக்கா – ஈரான் இடையே 3-ம் கட்ட பேச்சுவார்த்தை: அணு ஆயுதத் திட்டத்தை முடக்க டிரம்ப் அழுத்தம்!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான மூன்றாவது சுற்று மறைமுகப் பேச்சுவார்த்தைகள்...