sar scaled
இலங்கைசெய்திகள்

வடக்கில் 680 பாடசாலைகளை உடன் ஆரம்பிக்க நடவடிக்கை

Share

வடக்கு மாகாணத்தில் 200 மாணவர்களுக்கு உள்பட்ட 680 பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள என்று வடமாகாண ஆளுநர் திருமதி பி எம் எஸ் சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் வெளிமாவட்டங்களிலிருந்து பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தனியான பஸ் சேவை வழங்கவும் அனுமதி பெறப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தள்ளார்.

கல்வி அமைச்சுக்கும் மாகாண ஆளுநர்களுக்கும் இடையே இடம்பெற்ற கூட்டத்தில் 200 மாணவர்கள் உட்பட தரம் 1 – தரம் 5 வரையான ஆரம்பப் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் வடக்கு மாகாணத்தில் 200 மாணவர்களைக் கொண்ட 680 பாடசாலைகள் உள்ளன. அவற்றை உடனடியான ஆரம்பிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் ஆசிரியர்களுக்கு சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுக்க பயிற்சியளிப்பதற்கு மாகாண சபை நிதியில் சுகாதாரத் திணைக்களத்தை முன்னெடுக்க என்னால் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒட்சி மீற்றர் உள்ளிட்ட சுகாதார உபகரணங்களை பெற்று பாடசாலைகளுக்கும் வழங்க அதிகாரிகளுக்கு பணித்துள்ளேன்.

எனவே அனைத்த ஒழுங்குகளும் முடிவடையும் நிலையில் ஆரம்பப் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை தென்மாகாணத்தில் 200 மாணவர்களைக் கொண்ட ஆரம்பப் பாடசாலைகள் எதிர்வரும் ஒக்ரோபர் 15 ஆம் திகதி ஆரம்பமாகும் என மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...