24 6621f2b059969 1
இலங்கைசெய்திகள்

குற்றவாளிக்கு உதவிய பொலிஸ் அதிகாரிகள்

Share

குற்றவாளிக்கு உதவிய பொலிஸ் அதிகாரிகள்

குருநாகல் (Kurunegala) பொலிஸ் நிலையத்தில் தடுப்புக் காவலில் இருந்த போதைப்பொருள் குற்றவாளியொருவருக்கு உதவிய குற்றச்சாட்டில் இரண்டு பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குருநாகல் – மாவத்தகம பொலிஸ் நிலையத்தின் உதவிப் பொலிஸ் பரிசோதகர் (S.I) ஒருவரும் தொரடியாவ பொலிஸ் நிலைய சார்ஜண்ட் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

துபாயில் இருந்தபடி இலங்கையில் போதைப் பொருள் வர்த்தகத்தை நடத்தி வரும் நபருடன் உரையாடுவதற்காக குறித்த பொலிஸார் குற்றவாளிக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்த உதவியதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கமைய, மேற்குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

Share
தொடர்புடையது
பசில்
இலங்கை

பசில் விவகாரம் – சர்வதேச காவல்துறையினை நாடும் நீதித்துறை

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, அமெரிக்காவில் உள்ள நிலையில் அமெரிக்க நீதிமன்ற உத்தரவுகளின் பிரகாரம் நாட்டிற்கு...

body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...

நளிந்த ஜயதிஸ்ஸ
இலங்கை

ரணில் சஜித் கூட்டணி – அனுர அரசுக்கு கவலை இல்லை.

களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர்...

ஜனாதிபதி மாளிகை 12
இலங்கை

ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்களா?

வெளிநபர்கள் ஜனாதிபதி மாளிகைகளில் தங்கியிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை...