24 661f69ec21356
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் உருவாக்கப்பட்ட புதிய பதவிக்கு 6 இலட்சம் சம்பளம்

Share

நாடாளுமன்றத்தில் உருவாக்கப்பட்ட புதிய பதவிக்கு 6 இலட்சம் சம்பளம்

நாடாளுமன்றத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட பதவியான ‘பாதீட்டு அதிகாரிக்கு’ மொத்த மாதச் சம்பளமாக 665,000 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ இணையத்தளத்தின்படி, அதிகாரியின் அடிப்படை சம்பளம் 408,360 என்றும், அது அனைத்து கொடுப்பனவுகளுடன் மொத்தம் 665,000 ரூபாவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

அதிகாரியின் வயது வரம்பு 65 ஆக இருக்க வேண்டும். என்பதோடு அரச வரவு செலவுத் திட்டம், நிதிக் கொள்கை, அல்லது பொருளாதார பகுப்பாய்வு ஆகியவற்றில் குறைந்தபட்சம் 15 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

எவ்வாறாயினும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பொது நிதிக்கான குழுவின் தலைவருமான ஹர்ச டி சில்வா, முன்னாள் மூத்த பல்தரப்பு முகவர் நிபுணத்துவம் இந்த வேலைக்கு பொருந்துவார் என்று கூறியுள்ளார்.

அவரைப் பொறுத்தவரை பாதீட்டு அதிகாரி ஐந்தாண்டு ஒப்பந்தத்தில் பணியமர்த்தப்படுவார். 2023 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க நாடாளுமன்ற வரவு செலவுத் திட்ட அலுவலகச் சட்டத்தின் 14 ஆவது பிரிவின் கீழ் இந்தப் பதவி உருவாக்கப்பட்டது.

தகுதி வாய்ந்த, நேர்மையான, உயர்ந்த ஒழுக்க நேர்மை மற்றும் நல்ல நற்பெயரைக் கொண்ட இலங்கைப் பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. துணை பாதீட்டு; அதிகாரி பதவியும் இந்த சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற பாதீட்டு அலுவலகம் அரசியலமைப்பின் கீழ் பொது நிதி பொறுப்புகளை நிறைவேற்றுவதில் சட்டமன்றத்திற்கு உதவும் நோக்கத்துடன் நிறுவப்பட்டது. நாடாளுமன்ற பாதீட்டு அலுவலகம் சுதந்திரமானதாகவும், கட்சி சார்பற்றதாகவும், எந்தவொரு அரசியல் செல்வாக்கிலிருந்தும் பிரத்தியேகமாகவும் பாதுகாக்கப்பட்டதாகவும் இருக்கும்.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்நிறுத்தம்: ஜெருசலேமின் புனிதத் தலங்கள் மீண்டும் திறப்பு!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஜெருசலேமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதத் தலங்கள்...

world 52
செய்திகள்இலங்கை

பெண் எம்.பி.க்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை தேவை: சபாநாயகர் மீது சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு!

நாடாளுமன்றில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களைக் குறிவைத்து, கௌரவத்திற்கு ஒவ்வாத மற்றும் அவதூறான மொழியைப் பயன்படுத்தும் எதிர்க்கட்சி...

world 51
செய்திகள்இந்தியா

இந்தியாவில் 24 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு: அரசு அதிகாரி தகவல்!

இந்தியாவின் சுரங்கங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில், தொடர்ந்து 24 நாட்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்வதற்குத்...

world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...