24 661eb1e8adc70
இலங்கைசெய்திகள்

பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த பயிற்சி

Share

பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த பயிற்சி

இலங்கையில் பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த விசேட பயிற்சி வழங்கப்பட உள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்கு விஜயம் செய்திருந்த போது அவர் இன்றைய தினம் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி தப்பிச் செல்லும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களை மோட்டார் சைக்கிள்களில் துரத்திச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்த பயிற்சி வழங்கப்பட உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த 100 பேருக்கு இந்த விசேட துப்பாக்கிச் சூட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

எதிர்வரும் மூன்று மாத காலப் பகுதியில் இந்த நாட்டிலிருந்து போதைப் பொருள் மற்றும் பாதாள உலகக் குழு செயற்பாடுகள் இல்லாதொழிக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 204
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் 21 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை: பொதுமக்கள் அவதானமாக இருக்க அறிவுறுத்தல்!

இலங்கையின் 21 மாவட்டங்களில் இன்று (ஏப்ரல் 17) மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு (Heat...

world 203
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நுவரெலியா பம்பரக்கலையில் பயங்கர தீ விபத்து: 3 வீடுகள் முற்றாக எரிந்து சாம்பல்!

நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் அமைந்துள்ள பம்பரக்கலை (Pambarakelle) PWD லயன் குடியிருப்பு பகுதியில்...

world 202
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு அமைதி முன்னெடுப்பு: உலக நாடுகளின் பாராட்டைப் பெறும் பாகிஸ்தானின் மத்தியஸ்தப் பங்கு!

மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்கும் முயற்சிகளில் பாகிஸ்தான் ஒரு...

world 201
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அமைதிப் பேரணிக்காக இலங்கை வரும் ‘அலோகா’: விமானத்தில் பயணிகளுடன் பயணிக்கச் சிறப்பு அனுமதி!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள சர்வதேச “அமைதிப்...