24 661decada4dd3
இலங்கைசெய்திகள்

தீப்பிடித்து எரிந்த இராஜாங்க அமைச்சரின் கார்

Share

தீப்பிடித்து எரிந்த இராஜாங்க அமைச்சரின் கார்

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் (Samara Sampath Dasanayake) கார் திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் பண்டாரவளை (Bandarawela) – ஹல்பே பகுதியில் இன்று (16.4.2024) அதிகாலை 12.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

சாமர சம்பத் தசநாயக்க (Samara Sampath Dasanayake) மஹியங்கனையிலிருந்து எல்ல (Ella) பிரதேசத்திற்கு வந்து கொண்டிருந்த போதே பண்டாரவளை ஹல்பே பகுதியில் கார் திடீரென தீப்பிடித்துள்ளது.

எனினும், இந்த தீ விபத்தில் அமைச்சருக்கோ, சாரதிக்கோ காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

பண்டாரவளை மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினர் (fire department), எல்ல பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
manokanesan
இலங்கை

அரசை வீட்டிற்கு அனுப்புவோம் – மனோ கணேசன் சூளுரை.

“நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் வகையில் அரசு செயற்படக் கூடாது எனவும் 2029ஆம் ஆண்டு...

thadampuralvu
இலங்கை

மீண்டும் தடம் புரண்டது 1164 இலக்க தொடருந்து.

சற்றுமுன்னர் கொழும்பு- கோட்டை தொடருந்து நிலையத்தில் தொடருந்து ஒன்று தடம்புரண்டுள்ளதாள், தொடருந்து நிலையத்தின் இரண்டு மேடைகளின்...

train
இலங்கை

புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு.

நேற்று மாலை, கொழும்பு, பம்பலப்பிட்டி தொடரூந்து நிலையத்திற்கு அருகில் தொடரூந்தில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக...

dengu 19
இலங்கை

டெங்கு நோயாளிகளுக்கு மற்றுமொரு வைரசாலும் ஆபத்து – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நேற்றைய தினம் 2,652 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், நாட்டில் இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு...