dog getting
இந்தியாசெய்திகள்

கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக நாய் தடுப்பூசி!

Share

கொரோனா தடுப்பூசி ஏற்றச் சென்றவருக்கு வெறிநாய் கடிக்கு ஏற்றப்படுகின்ற ஊசியை வைத்தியர் ஒருவர் ஏற்றியுள்ளார்.

இந்தச் சம்பவம் இந்தியாவில் மகாராஷ்டிராவில் உள்ள மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

கொரோனாத் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக சுகாதார நிலையம் ஒன்றுக்கு குறித்த நபர் சென்றுள்ளார்.

இதன்போது அங்கு பணியில் இருந்த வைத்தியர் குறித்த நபருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளார்.

அதன்பின்னர் மருந்து போத்தலை கவனித்தபோது அது கொரோனாவுக்கான தடுப்பூசி அல்ல வெறிநாய் கடிக்கு செலுத்தப்படும் ஊசி மருந்து என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த நபர் முறைப்பாடு செய்ததை அடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அத்துடன் குறித்த வைத்தியரும் தாதியும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு தற்போது அவர் நலமுடன் இருக்கிறார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...