24 661a83250e399
உலகம்செய்திகள்

வெளிநாடொன்றில் இடித்து தகர்க்கப்பட்ட புராதன இந்து கோவில்

Share

வெளிநாடொன்றில் இடித்து தகர்க்கப்பட்ட புராதன இந்து கோவில்

பாகிஸ்தானில் (Pakistan) புராதான மிக்க இந்து கோயிலொன்று இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயில் இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, பாகிஸ்தான் (Pakistan) இந்து கோயில் நிர்வாகக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கோயில் அமைந்திருந்த இடத்தில் புதிதாக வர்த்தக வளாகம் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் (Afghanistan) – பாகிஸ்தான் (Pakistan) எல்லையையொட்டி கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் லாண்டி கோடல் பஜார் நகரில் அமைந்துள்ள ’கைபர் கோயில்’, 1947-ஆம் ஆண்டு முதல் பக்தர்கள் யாரும் வழிபடாத காரணத்தால் மூடப்பட்டுள்ளது.

காலப்போக்கில் சிதிலமைடைந்து காட்சியளித்த கோயில், கடந்த 10 நாள்களுக்கு முன்பு முழுமையாக இடிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் சிறுபான்மையின மக்களுடைய வரலாற்று கட்டடங்களின் பாதுகாப்பை உறுதி செய்து மறுசீரமைப்பது, மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு துறைகளின் பொறுப்பு என பாகிஸ்தான் (Pakistan) இந்து கோயில் நிர்வாகக் குழு வலியுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ நிலப் பதிவேட்டில் கோயிலைப் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை என அரசுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
MediaFile 6
செய்திகள்இலங்கை

நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்: மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு அனுதாபப் பிரேரணைகள் இன்று இடம்பெறுகிறது!

சபாநாயகர் மருத்துவர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்றைய (அக்டோபர் 24, 2025) நாளுக்கான நாடாளுமன்ற அமர்வுகள்...

25 68fa9219d9e29 1
செய்திகள்உலகம்

ஜெர்மனியில் குழப்பம்: ராணுவப் பயிற்சி குறித்த தகவல் இல்லாததால், ராணுவ வீரரை சுட்டுக் காயப்படுத்திய காவல்துறை!

ஜெர்மனியின் பவேரியா மாகாணத்தில் உள்ள மியூனிக் நகரில், பொதுமக்கள் முகமூடி அணிந்த சிலர் கட்டிடங்களுக்குள் சென்று...

25 68fac88cc2a44
செய்திகள்இலங்கை

2026 பட்ஜெட் உரைக்கு முன்னதாக நாடாளுமன்றத்தில் 3 நாட்களுக்கு விசேட பாதுகாப்பு பரிசோதனை!

அடுத்த ஆண்டுக்கான (2026) பட்ஜெட் உரைக்கு முன்னதாக, அடுத்த மாதம் (நவம்பர்) மூன்று நாட்களுக்கு நாடாளுமன்ற...

25 67be1398d1cd3 770x470 1
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை: இஷாரா தப்பிச் சென்ற படகை செலுத்திய யாழ் இளைஞன் அதிரடி கைது!

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி இந்தியாவிற்குத் தப்பிச் செல்வதற்குப் பயன்படுத்தப்பட்ட...