24 661a0f2d75261
இலங்கைசெய்திகள்

பண்டிகைக் காலத்தில் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Share

பண்டிகைக் காலத்தில் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

பண்டிகைக் காலத்தில் விபத்துக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கவனயீனமாக வாகனம் செலுத்துதல் மற்றும் குடிபோதையில் வாகனம் செலுத்துதல் போன்றவற்றினால் வாகன விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, வேகமாக வாகனம் செலுத்துதல், கவனயீனமாக வாகனம் செலுத்துதல் மற்றும் மோட்டார் போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் செலுத்துவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குடிபோதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்வதற்கு விசேட பிரிவுகள் நாடு முழுவதிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் முதல் மோட்டார் சைக்கிள்களில் பொலிஸார் ரோந்துப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
அகில விராஜ் காரியவசம் 1
இலங்கை

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது!

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம், வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்றைய...

சீரற்ற காலநிலை
இலங்கை

காலநிலை தாக்கத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அதிகரிப்பு – துரித கதியில் இடம்பெறும் சீரமைப்பு பணிகள்.

தற்போது நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், 3 ஆயிரத்து...

கைக்குண்டுகள்
இலங்கை

இரத்மலானை பகுதியில் வீட்டின் மேல் வீசப்பட்ட கைக்குண்டுகள்.

இரத்மலானை ஸ்ரீ ஞானேந்திர வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர்...

vellam 2
இலங்கை

களனி மற்றும் களு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்கள்.

நேற்றைய தினம், பிற்பகல் 1.30 மணிக்கு களனி கங்கையை ஒட்டி பெரு வெள்ள அபாயமும், பிற்பகல்...