24 661899ddb8270
இலங்கைசெய்திகள்

இலங்கை மாணவர்களின் திறமை : பாடசாலையில் உருவாக்கப்பட்ட கார்

Share

இலங்கை மாணவர்களின் திறமை : பாடசாலையில் உருவாக்கப்பட்ட கார்

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட கினிகத்தேன பாடசாலையின் 13 தரம் பொறியியல் மாணவர்கள் குழுவொன்று கார் ஒன்றை உருவாக்கியுள்ளது.

கினிகத்தேன பாடசாலையின் பொறியியல் தொழில்நுட்பத்தை சேர்ந்த கலாநிதி இந்திக்க காரியவசம் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், பொறியியல் தொழில்நுட்ப மாணவனான கலன கௌசல்ய தலைமையிலான மாணவர்கள் குழுவொன்று இந்த காரை உருவாக்கி அதற்கு Gcianz Black Bullet எனப் பெயரிட்டுள்ளது.

தனது பாடசாலையில் பயிலும் மாணவர்கள் குழுவொன்று இவ்வாறான காரை உருவாக்குவது இதுவே முதல் முறை என கினிகத்ஹேன பாடசாலையின் அதிபர் உபுல் இந்திரஜித் தெரிவித்துள்ளார்.

அணியின் தலைவர் கலன கௌசல்ய, கார் இயந்திரவியலில் விசேட அறிவும் திறமையும் கொண்டவர் எனவும் தெரிவித்தார்.

இதற்கு முன்னர் நாடு முழுவதிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட 10 புத்தாக்க பாடசாலை மாணவர்களில் கினிகத்தேனை பாடசாலையைச் சேர்ந்த இரு மாணவர்களும் அடங்குவதாகவும், அவ்வாறான மாணவர்களின் ஆக்கத்திறன்களை வளர்த்து தனது பாடசாலைக்கு பெருமை சேர்ப்பதன் மூலம் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாகவும் அதிபர் குறிப்பிட்டார்.

மேலும் இந்த கார் தொடர்பான மேலதிக தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 6947c9eb14d31
உலகம்செய்திகள்

பங்களாதேஷில் தீப்பிடிக்கும் வன்முறை: அரசியல்வாதியின் வீட்டுக்குத் தீ வைப்பு; 7 வயது மகள் உடல் கருகி பலி!

பங்களாதேஷில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து வெடித்துள்ள கலவரம், தற்போது...

Namal Rajapaksa 1
செய்திகள்அரசியல்இலங்கை

நிவாரணம் 10% மக்களுக்கே சென்றடையும்; நடைமுறைச் சாத்தியமான திட்டங்கள் அவசியம்” – நாமல் ராஜபக்ச காட்டம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் தற்போதைய நடைமுறைகள் போதுமானதாக இல்லை என...

பேராதனை
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு: 29ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

‘டித்வா’ சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின்...

25 69475175d454d
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையை மீட்டெடுக்க இந்தியாவின் ‘பேருதவித் திட்டம்’: நாளை கொழும்பு வருகிறார் ஜெய்சங்கர்!

புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீட்டெடுப்பதற்கான பாரிய உதவித்...