24 66161b6eaa27c
இந்தியாஉலகம்செய்திகள்

அம்பானி இல்லத்தில் விழா? ஜாம்நகரில் அடுத்த பிரமாண்ட பார்ட்டி!

Share

அம்பானி இல்லத்தில் விழா? ஜாம்நகரில் அடுத்த பிரமாண்ட பார்ட்டி!

மகன் ஆனந்த் அம்பானியின் திருமண நிச்சயதார்த்தத்திற்கு பிரமாண்ட விழா நடத்தியதை தொடர்ந்து, முகேஷ் அம்பானி ஜாம்நகரில் இன்னொரு பிரமாண்ட பார்ட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

முகேஷ் அம்பானி அண்மையில் தனது மகன் ஆனந்த் அம்பானியின் திருமண நிச்சயதார்த்தத்திற்கு முன்னதாக ஜாம்நகரில் பிரமாண்ட விழா நடத்தினார்.

இதில், கோடீஸ்வரர்கள் முதல் திரைப்பட நட்சத்திரங்கள் வரை, உலகமெங்கும் இருந்து பிரபலங்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

இந்த விழாவின் வீடியோக்கள் இணையத்தில் பரவலாக பார்க்கப்பட்டன. மக்கள் இன்னும் அந்த விழாவின் பிரமாண்டத்தை மறந்து கொள்ளாத நிலையில், இப்போது முகேஷ் அம்பானி தனது மகன் ஆனந்த் அம்பானியின் 29வது பிறந்தநாளை கொண்டாட ஜாம்நகரில் மற்றொரு பிரபலங்கள் நிறைந்த விழாவை நடத்த இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி ஏப்ரல் 10ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடுகிறார், இந்த வருடம் அவருக்கு 29 வயது பூர்த்தி அடைகிறது.// ராதிகா மெர்ச்சண்ட் உடனான நிச்சயதார்த்தத்திற்கு பிறகு வரும் முதல் பிறந்தநாளை குறிக்கும் விதமாக, அம்பானி குடும்பத்தினர் ஜாம்நகரில் ஒரு பிரமாண்ட விழாவை ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த விழாவிற்காக சல்மான் கான், ஓரி, சித்தார்த் பஹரியா மற்றும் மீஸான் ஜாஃப்ரி உள்ளிட்ட பிரபலங்கள் ஏற்கனவே ஜாம்நகருக்கு வந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அம்பானி குடும்பத்தின் ரசிகர் பக்கங்கள் விழா நடக்கும் இடத்தின் சில புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளன. பாடகர் பி பிராக் ஆனந்த் அம்பானியின் பிறந்தநாள் விழாவில் பாட இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

அம்பானி சகோதரர்களில் ஆனந்த் அம்பானி இளையவர். இந்தியாவின் மிகப் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற நிலையில் இருந்தாலும், ஈஷா அம்பானி, ஆகாஷ் அம்பானி மற்றும் ஆனந்த் அம்பானி ஆகியோர் தங்கள் பணிவு மற்றும் பாரம்பரிய மதிப்பிற்காக அறியப்படுகிறார்கள்.

பிரவுன் பல்கலைக்கழகத்தில் படித்த ஆனந்த் அம்பானி தற்போது ரிலையன்ஸ் நிறுவனத்தின் புதிய ஆற்றல் வணிகத்தை கையாள்கிறார்.

அவர் ரிலையன்ஸ் 02C மற்றும் ரிலையன்ஸ் நியூ சோலார் எனர்ஜி ஆகியவற்றின் இயக்குநர் பதவியில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 40 பில்லியன் டாலர்களுக்கு மேல் இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
images 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீழ்ச்சியடையும் கல்வித் தரம்: முல்லைத்தீவு வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தைப் பாதுகாக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தில் நிலவும் பல்வேறு குறைபாடுகளை நிவர்த்தி செய்து,...

26 695661e2a824f
செய்திகள்அரசியல்இலங்கை

மில்கோ நிறுவன வரலாற்றில் சாதனை இலாபம்: ஊழியர்களுக்கு போனஸ் வழங்கினார் அமைச்சர் லால்காந்த!

இலங்கையின் மில்கோ (Milco) நிறுவனம் தனது வரலாற்றிலேயே மிக உயர்ந்த இலாபத்தைப் பதிவு செய்துள்ளதாக விவசாய,...

images 1
செய்திகள்இந்தியா

இந்தியாவிற்கு வருகிறது BTS! மும்பையில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி – ஆர்மி ரசிகர்கள் உற்சாகம்!

உலகப் புகழ்பெற்ற தென்கொரிய இசைக்குழுவான BTS (Bangtan Boys), தங்களின் உலகளாவிய இசைப் பயணத்தின் (World...

gun shooting 1
செய்திகள்அரசியல்இலங்கை

2025-ல் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்: 60 பேர் பலி – பொலிஸார் அதிரடித் தகவல்!

கடந்த (2025) ஆண்டில் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியதாகவும் அதில் 60 பேர் உயிரிழந்ததுடன்,...