24 6611fd28e76fe
இலங்கைசெய்திகள்

சுங்க வரி செலுத்தத்தவறியுள்ள அரச நிறுவனங்கள்

Share

சுங்க வரி செலுத்தத்தவறியுள்ள அரச நிறுவனங்கள்

ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட 41 அரச நிறுவனங்கள் கடந்த வருடம் (2023) டிசம்பர் 31ஆம் திகதி வரை 58.6 பில்லியன் ரூபா சுங்க வரி செலுத்தத் தவறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

01 மற்றும் 05 வருடங்களுக்கு இடையில் இந்த அரச நிறுவனங்களால் செலுத்தப்படாத சுங்க வரித் தொகை 1.61 பில்லியன் ரூபாவாகும்.

5 முதல் 15 வருடங்களுக்கு இடையில் 56.99 பில்லியன் ரூபா சுங்க வரிப் பணமாக ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, கைத்தொழில் மற்றும் வர்த்தகம், சுகாதாரம், கல்வி, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி, நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்கல்வி, பொருளாதார அபிவிருத்தி, அனர்த்த முகாமைத்துவம், மதம், கலாச்சாரம் மற்றும் இளைஞர் விவகார அமைச்சுக்கள் சுங்க வரி செலுத்த தவறியுள்ளன.

மேலும், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு, துறைமுகங்கள், தேசத்தை கட்டியெழுப்புதல், கடற்றொழில், விளையாட்டு, மின்சாரம் மற்றும் எரிசக்தி, தொழில்சார் மற்றும் கைத்தொழில் பயிற்சி, மீள்குடியேற்றம், சுற்றுச்சூழல், பாதுகாப்பு, சுற்றுலா, போக்குவரத்து, சமூக சேவைகள், வெகுஜன ஊடகம், விவசாயம், கூட்டுறவு, நகர அபிவிருத்தி ஆகிய அமைச்சுகள் வரி செலுத்தவில்லை என கூறப்படுகின்றது.

இலங்கை இராணுவம், நிதியமைச்சு, பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபை ஆகியனவும் சுங்க வரி செலுத்த தவறியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
images 20
இலங்கைசெய்திகள்

டிட்வா சூறாவளி நிவாரணம்: பாகிஸ்தான் 7.5 டன் மேலதிக உதவிகளை இலங்கைக்கு அனுப்பியது!

‘டிட்வா’ சூறாவளியால் இலங்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் மொஹமட் ஷபாஸ் ஷெரீப்பின் பணிப்புரையின்...

22727102 s
செய்திகள்விளையாட்டு

2026 உலகக் கிண்ணக் கால்பந்து அட்டவணை வெளியீடு: 48 அணிகள் பங்கேற்கும் திருவிழா ஜூன் 11 இல் ஆரம்பம்!

உலக மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் 2026 உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளுக்கான அட்டவணையை ஃபிபா...

images 4 2
உலகம்செய்திகள்

ஜப்பான் போர் விமானங்கள் மீது FCR ரேடார் மூலம் சீனா அச்சுறுத்தல்: பதற்றம் அதிகரிப்பு!

ஜப்பானின் போர் விமானங்கள் மீது, எஃப்.சி.ஆர். எனப்படும் ஆயுதக் கட்டுப்பாட்டு ரேடாரை பயன்படுத்திச் சீனா அச்சுறுத்தியதாக...

articles2FSNhOIAsQzPoz2H46RiuW
உலகம்செய்திகள்

விமானப் பயணிகளுக்குச் சிங்கப்பூர் கடுமையான கட்டுப்பாடுகள்: ஜனவரி 30 முதல் அமுல்!

உலகளவில் மிகவும் பாதுகாப்பான நாடுகளில் முன்னிலை வகிக்கும் சிங்கப்பூர், தனது பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக,...