24 660e4c29096a8
உலகம்செய்திகள்

இந்திய இராணுவத்தை விரட்டும் மாலைதீவு!

Share

இந்திய இராணுவத்தை விரட்டும் மாலைதீவு!

மாலைதீவில் இருந்து இந்திய இராணுவப் படையின் 2-ஆவது குழு இந்த மாதத்துக்குள் வெளியேறும் என்று அந்நாட்டு அதிபா் மூயிஸ் தெரிவித்துள்ளாா்.

மாலைதீவுக்கு மருத்துவ உதவி மற்றும் மனிதாபிமான சேவைகளுக்காக இரண்டு அதிநவீன இலகுரக ஹெலிகாப்டா்கள், ஒரு டாா்னியா் விமானம் ஆகியவற்றை இந்தியா வழங்கியது.

அவற்றை அந்நாட்டில் பராமரித்து, இயக்குவது உள்ளிட்ட பணிகளில் 88 இந்திய ராணுவ வீரா்கள் ஈடுபட்டனா்.

அந்த வீரா்களை திரும்பப் பெறுமாறு சீன ஆதரவாளரான அதிபா் மூயிஸ் இந்திய அரசிடம் வலியுறுத்தினாா். இதனால் இந்தியா, மாலைதீவு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.

கடந்த பெப்ரவரி 2-ஆம் திகதி டெல்லியில் இரு நாடுகளுக்கு இடையே உயா்நிலைக் குழு கூட்டம் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்துக்குப் பின்னா், மே 10-ஆம் திகதிக்குள் மாலைதீவில் உள்ள இந்திய ராணுவ வீரா்கள் முற்றிலும் திரும்பஅனுப்பப்படுவார்கள் என மாலைதீவு வெளியுறவுத் துறை தெரிவித்தது.

அதேவேளையில், மாலைதீவுக்கு இந்தியா வழங்கிய ஹெலிகாப்டா்கள் மற்றும் விமானத்தை பராமரித்து இயக்க, இந்திய இராணுவ வீரா்களுக்குப் பதிலாக நிபுணத்துவம் பெற்றவா்களை அந்நாட்டுக்கு மத்திய அரசு அனுப்ப மாலைதீவு ஒப்புக்கொண்டது.

இதையடுத்து மாலைதீவில் இந்தியா வழங்கிய ஹெலிகாப்டருக்கு பொறுப்பேற்க இராணுவம் அல்லாத 26 போ் அடங்கிய குழுவை மத்திய அரசு அனுப்பி வைத்தது.

இதைத்தொடா்ந்து கடந்த சில நாள்களுக்கு முன்னா், அந்நாட்டில் இருந்து சுமாா் 25 இந்திய இராணுவ வீரா்கள் அடங்கிய முதல் குழு தாயகம் திரும்பியது.

இந்நிலையில், மாலைதீவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அதிபா் மூயிஸ் பேசுகையில், ‘இந்த மாதத்துக்குள் இந்திய படையினரின் 2-ஆவது குழுவும், மே 10-க்குள் இந்திய படையினரின் 3-ஆவது குழுவும் மாலைதீவில் இருந்து வெளியேறும்’ என்று கூறியதாக அந்நாட்டு ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...