24 660e39b3dcc3a
இலங்கைசெய்திகள்

இரு தேர்தல்களை ஒரே நாளில் நடத்தும் முயற்சி: உதய கம்மன்பில

Share

இரு தேர்தல்களை ஒரே நாளில் நடத்தும் முயற்சி: உதய கம்மன்பில

ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களை ஒரே நாளில் நடத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நம்பத்தகுந்த தரப்புகளை மேற்கோள்காட்டி நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) தகவல் வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஸ்தாபகர் பசில் ராஜபக்சவிற்கும் (Basil Rajapaksa) இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன.

ஜனாதிபதி முதலில் ஜனாதிபதி தேர்தலையும் பின்னர் நாடாளுமன்றத் தேர்தலையும் விரும்புகின்ற நிலையில் பசில் ராஜபக்ச அதற்கு நேர்மாறான செயற்பாட்டை விரும்புவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலை ஒரே நாளில் நடத்துவது தொடர்பில் அரசாங்கத்தில் தற்போது பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றது.

மேலும் இரண்டு தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்துவதற்கு எவ்வித தடைகளும் இல்லை எனினும், இறுதியில் பொது மக்களுக்கு உகந்த தேர்தலை முதலில் நடத்த வேண்டும் என்றும் உதய கம்மன்பில கோரியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 92
செய்திகள்உலகம்

‘அவரை மீட்டுவிட்டோம்’: ஈரானில் அமெரிக்க விமானி அதிரடி மீட்பு!

ஈரானிய வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்திலிருந்து குதித்து மாயமாகியிருந்த விமானி, ஒரு துணிச்சலான...

Untitled 91
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி: புதிய உரம் ஒதுக்கீட்டு முறை அறிமுகம்!

இலங்கை சந்தையில் உரத்தின் விலையினைக் கட்டுப்படுத்தி, விவசாயிகளுக்கு நியாயமான விலையில் தட்டுப்பாடின்றி உரம் கிடைப்பதை உறுதி...

Untitled 90
செய்திகள்உலகம்

புஷெர் அணுமின் நிலையம் மீது தாக்குதல்: கதிர்வீச்சு அபாயம் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வரும்...

Untitled 89
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கியூ.ஆர். பணப்பரிமாற்றத்திற்கு இனி கட்டணமில்லை: நாளை முதல் அதிரடி மாற்றம்!

இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், லங்கா கியூ.ஆர் (LankaQR) மூலமான பணப்பரிமாற்றங்களுக்கு நாளை (ஏப்ரல்...