Hirunika Premachandra
இலங்கைசெய்திகள்

விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கிய மகிந்த: சுட்டிக்காட்டும் முன்னாள் எம்.பி

Share

விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கிய மகிந்த: சுட்டிக்காட்டும் முன்னாள் எம்.பி

2005 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு பணம் வழங்கியதன் மூலம் வெற்றி பெற்றதாக முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மாநாடு ஒன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, விடுதலைப் புலிகளின் அமைப்பிற்கு பை நிறைய பணம் வழங்கியதன் மூலமாகவே யுத்தம் நிறுத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

2005 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்தது திட்டமிட்ட சதி எனவும் அதன் பின்னர் தமது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக இவ்வாறான பல சதிகளை முன்னெடுத்துள்ளனர் என்றும் முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போதைய அதிபரும் அப்போதைய ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க அந்த நடவடிக்கைகளுக்கு தெரிந்தோ தெரியாமலோ உதவியதாகவும் அவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
44522559 ravann
செய்திகள்உலகம்

மதுரோ பாணி கைது புதினுக்குப் பொருந்தாது: உக்ரைன் ஜனாதிபதியின் எதிர்பார்ப்பும் ட்ரம்பின் நேரடிப் பதிலும்!

வெனிசுவேலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதே போன்றதொரு...

images 4 3
செய்திகள்அரசியல்இலங்கை

டக்ளஸ் தேவானந்தா ஒரு சர்வதேசக் குற்றவாளி; கைதை வெறும் கண்துடைப்பாக மாற்ற வேண்டாம் – சட்டத்தரணி சுகாஸ் கடும் சாடல்!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெறும் ஆயுத மோசடியாளர் மட்டுமல்ல, அவர் தமிழர்களுக்கு எதிரான பல...

black flag
செய்திகள்இலங்கை

பெப்ரவரி 04 தமிழர்களின் கரிநாள்: கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பில் பாரிய பேரணிக்கு அழைப்பு!

இலங்கையின் சுதந்திர தினமான எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதியை, தமிழர் தேசத்தின் “கரிநாளாக”...

External Affairs Minister S Jaishankar calls on Sri Lankan President Anura Kumara Dissanayake in Colombo on Tuesday. ANI
செய்திகள்இலங்கை

இலங்கை அரசியலில் இராஜதந்திரப் போர்: இந்தியாவின் $450 மில்லியன் நிதியுதவியும், சீனாவின் அடுத்தகட்ட நகர்வும்!

இலங்கைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட இந்திய மற்றும் சீன உயர்மட்டத் தூதுவர்களின் சந்திப்புகள் குறித்து இதுவரை...