Hirunika Premachandra
இலங்கைசெய்திகள்

விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கிய மகிந்த: சுட்டிக்காட்டும் முன்னாள் எம்.பி

Share

விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கிய மகிந்த: சுட்டிக்காட்டும் முன்னாள் எம்.பி

2005 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு பணம் வழங்கியதன் மூலம் வெற்றி பெற்றதாக முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மாநாடு ஒன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, விடுதலைப் புலிகளின் அமைப்பிற்கு பை நிறைய பணம் வழங்கியதன் மூலமாகவே யுத்தம் நிறுத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

2005 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்தது திட்டமிட்ட சதி எனவும் அதன் பின்னர் தமது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக இவ்வாறான பல சதிகளை முன்னெடுத்துள்ளனர் என்றும் முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போதைய அதிபரும் அப்போதைய ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க அந்த நடவடிக்கைகளுக்கு தெரிந்தோ தெரியாமலோ உதவியதாகவும் அவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
சுரேஸ் பிரேமச்சந்திரன்
இலங்கை

குற்ற செயல்களில் தற்கால அரசுக்கும் பங்குண்டு – சுரேஸ் பிரேமச்சந்திரன்

மட்டக்களப்பு – வாவிக்கரை வீதியில் உள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற...

சுகீஸ்வர பண்டார
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளருக்கு விளக்கமறியல்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் உத்தரவு ஜூலை 30...

காணாமல் ஆக்கப்பட்டோர்nnnn
இலங்கை

அவர்களின் வார்த்தைகளில் நம்பிக்கை இல்லை – தூதுக்குழுவினரின் வருகையினை தொடர்ந்து வந்துள்ள கருத்து.

இன்று, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடன் சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அமைந்துள்ள மனிதக் புதைகுழியை பார்வையிட்ட பின்னர்...

Ravindra Wijegunaratne
இலங்கை

முன்னாள் கடற்படைத் தளபதிக்கு பிணை.

முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன 2008ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில்...