24 660d12a8b0ee4
இலங்கைசெய்திகள்

விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கிய மகிந்த

Share

விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கிய மகிந்த

2005 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு பணம் வழங்கியதன் மூலம் வெற்றி பெற்றதாக முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மாநாடு ஒன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, விடுதலைப் புலிகளின் அமைப்பிற்கு பை நிறைய பணம் வழங்கியதன் மூலமாகவே யுத்தம் நிறுத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

2005 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்தது திட்டமிட்ட சதி எனவும் அதன் பின்னர் தமது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக இவ்வாறான பல சதிகளை முன்னெடுத்துள்ளனர் என்றும் முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போதைய அதிபரும் அப்போதைய ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க அந்த நடவடிக்கைகளுக்கு தெரிந்தோ தெரியாமலோ உதவியதாகவும் அவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...