24 660b95dbad8d8
இலங்கைசெய்திகள்

நாட்டில் வெங்காய இறக்குமதியில் பாரிய மோசடி

Share

நாட்டில் வெங்காய இறக்குமதியில் பாரிய மோசடி

கடந்த வருடம் பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்த சில வர்த்தகர்கள் 8,000 கோடி ரூபாவுக்கும் மேல் இலாபமீட்டியுள்ளதாக வெளிக்கொணரப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தவிசாளராக செயற்படுகின்ற வழிவகைகள் பற்றிய தெரிவுக்குழுவின் இரண்டாவது அறிக்கை நாடாளுமன்றத்தில் நேற்று (01.3.2024) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் வழிவகைகள் பற்றிய தெரிவுக்குழுவின் இரண்டாவது அறிக்கை ஊடாகவே உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, உலர்த்தப்பட்ட நெத்திலி, மாசிக் கருவாடு, பாசிப்பயறு ஆகியவற்றின் ஊடாக சம்பாதித்த விதம் வெளிக்கொணரப்பட்டது.

2022ஆம் ஆண்டில் துறைமுகத்தில் இறக்கப்பட்ட போது ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை 103 ரூபாவாகும்.

இது காப்புறுதி, கொள்கலன் கட்டணம், இறக்குமதி வரி உள்ளிட்ட செலவுகள் உள்ளடங்கிய விலையாகும்.

ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் கொழும்பு சந்தையில் 213 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய முதலீட்டுடன் ஒப்பிடுகையில் 109 ரூபா இலாபம் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த வருடம் இந்த இலாபம் 273 ரூபா வரை அதிகரித்துள்ளது.

இந்த பொருட்களை விற்பனை செய்ததன் ஊடாக ஒரு சிலர் மாத்திரம் வழமைக்கு மாறான இலாபத்தை பெற்றுள்ளதாக வழிவகைகள் பற்றிய தெரிவுக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

துறைமுகத்தில் இறக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் விசேட வர்த்தக வரி கொள்கலன் கட்டணம் உள்ளடங்களாக ஒரு கிலோகிராமுக்கான செலவிற்கும் சந்தையில் விற்பனை விலைக்கும் இடையே பாரிய வேறுபாடு காணப்படுகின்றமை தொடர்பாக தெரிவுக்குழு கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த வேறுபாடு ஊடாக கிடைத்த இலாபம் 100 ரூபாவில் இருந்து 1000 ரூபா வரை காணப்படுகிறது என குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
1722752828 dds
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை பிரஜை இராமேஸ்வரத்தில் கைது: புழல் சிறையில் அடைப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாகச் சட்டவிரோதமாகப் புறப்பட்டு, இந்தியக் கடற்கரையை அடைந்த இலங்கை பிரஜை ஒருவர், இராமேஸ்வரத்தில்...

2 nurse
இலங்கைசெய்திகள்

தாதியர் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: 175 வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக ஆட்சேர்ப்பு – சுகாதார அமைச்சர் உத்தரவு!

நாட்டின் தாதியர் கல்லூரிகளில் (Nursing Colleges) தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு...

MediaFile 3 1
செய்திகள்அரசியல்இலங்கை

போதைப்பொருள் உற்பத்தி வழக்கு: சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான பேருந்து, கார், கெப் வாகனம் பறிமுதல்!

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ஒரு...

1728539417 vimalveravamnsa 2
செய்திகள்அரசியல்இலங்கை

நவம்பர் 21 எதிர்ப்புப் பேரணி: தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்க மறுப்பு – விமல் வீரவங்ச அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என தேசிய...