24 66087cabd395b
இலங்கைசெய்திகள்

கடற்றொழிலாளர்கள் தொடர்பில் ரணில் வழங்கிய கோரிக்கை

Share

கடற்றொழிலாளர்கள் தொடர்பில் ரணில் வழங்கிய கோரிக்கை

இந்திய பிரத்தியேக பொருளாதார மண்டலம் வழியாக தனது கடற்றொழிலாளர்கள் தொழில் நிமித்தம் அரபிக்கடலுக்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்ற இலங்கையின் கோரிக்கைக்கு இந்தியா இன்னும் பதிலளிக்கவில்லை.

கடந்த வருடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் செய்த போது இலங்கையின் சார்பில் இந்த கோரிக்கையை விடுத்தார்.

இந்திய பொருளாதார மண்டலத்தின் ஊடாக அரபிக்கடலுக்கு செல்லும்போது இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு மொத்த தூரத்தில் 400 கடல் மைல்கள் தூரம் குறையும். இல்லையேல், இலங்கையின் கடற்றொழிலாளர்கள், நீர்கொழும்பு, திக்கோவிட்ட, பேருவளை மற்றும் மாத்தறை வழியாக மாலைதீவைச் சுற்றி நீண்ட பாதையில் சென்றே அரபிக்கடலில் தொழிலில் ஈடுபடுகின்றனர்.

அத்துடன் தற்போது இலங்கை கடற்றொழிலாளர்கள், அரபிக்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் வழியில் சட்டவிரோதமாக இந்திய கடல் எல்லைக்குள் நுழையும் போது இந்திய கடலோர காவல்படையினரால் தடுத்து வைக்கப்படுகின்றனர்.

இதனை மையப்படுத்தியே இலங்கையின் கோரிக்கை இந்தியாவிடம் விடுக்கப்பட்டுள்ளது. எனினும் இன்னும் பதில் வழங்கப்படவில்லை.

அதேநேரம் இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத கடற்றொழில் தொடர்பிலும் இன்னும் தீர்வுகள் முன்வைக்கப்படவில்லை.

Share
தொடர்புடையது
44522559 ravann
செய்திகள்உலகம்

மதுரோ பாணி கைது புதினுக்குப் பொருந்தாது: உக்ரைன் ஜனாதிபதியின் எதிர்பார்ப்பும் ட்ரம்பின் நேரடிப் பதிலும்!

வெனிசுவேலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதே போன்றதொரு...

images 4 3
செய்திகள்அரசியல்இலங்கை

டக்ளஸ் தேவானந்தா ஒரு சர்வதேசக் குற்றவாளி; கைதை வெறும் கண்துடைப்பாக மாற்ற வேண்டாம் – சட்டத்தரணி சுகாஸ் கடும் சாடல்!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெறும் ஆயுத மோசடியாளர் மட்டுமல்ல, அவர் தமிழர்களுக்கு எதிரான பல...

black flag
செய்திகள்இலங்கை

பெப்ரவரி 04 தமிழர்களின் கரிநாள்: கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பில் பாரிய பேரணிக்கு அழைப்பு!

இலங்கையின் சுதந்திர தினமான எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதியை, தமிழர் தேசத்தின் “கரிநாளாக”...

External Affairs Minister S Jaishankar calls on Sri Lankan President Anura Kumara Dissanayake in Colombo on Tuesday. ANI
செய்திகள்இலங்கை

இலங்கை அரசியலில் இராஜதந்திரப் போர்: இந்தியாவின் $450 மில்லியன் நிதியுதவியும், சீனாவின் அடுத்தகட்ட நகர்வும்!

இலங்கைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட இந்திய மற்றும் சீன உயர்மட்டத் தூதுவர்களின் சந்திப்புகள் குறித்து இதுவரை...