24 66087cabd395b
இலங்கைசெய்திகள்

கடற்றொழிலாளர்கள் தொடர்பில் ரணில் வழங்கிய கோரிக்கை

Share

கடற்றொழிலாளர்கள் தொடர்பில் ரணில் வழங்கிய கோரிக்கை

இந்திய பிரத்தியேக பொருளாதார மண்டலம் வழியாக தனது கடற்றொழிலாளர்கள் தொழில் நிமித்தம் அரபிக்கடலுக்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்ற இலங்கையின் கோரிக்கைக்கு இந்தியா இன்னும் பதிலளிக்கவில்லை.

கடந்த வருடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் செய்த போது இலங்கையின் சார்பில் இந்த கோரிக்கையை விடுத்தார்.

இந்திய பொருளாதார மண்டலத்தின் ஊடாக அரபிக்கடலுக்கு செல்லும்போது இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு மொத்த தூரத்தில் 400 கடல் மைல்கள் தூரம் குறையும். இல்லையேல், இலங்கையின் கடற்றொழிலாளர்கள், நீர்கொழும்பு, திக்கோவிட்ட, பேருவளை மற்றும் மாத்தறை வழியாக மாலைதீவைச் சுற்றி நீண்ட பாதையில் சென்றே அரபிக்கடலில் தொழிலில் ஈடுபடுகின்றனர்.

அத்துடன் தற்போது இலங்கை கடற்றொழிலாளர்கள், அரபிக்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் வழியில் சட்டவிரோதமாக இந்திய கடல் எல்லைக்குள் நுழையும் போது இந்திய கடலோர காவல்படையினரால் தடுத்து வைக்கப்படுகின்றனர்.

இதனை மையப்படுத்தியே இலங்கையின் கோரிக்கை இந்தியாவிடம் விடுக்கப்பட்டுள்ளது. எனினும் இன்னும் பதில் வழங்கப்படவில்லை.

அதேநேரம் இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத கடற்றொழில் தொடர்பிலும் இன்னும் தீர்வுகள் முன்வைக்கப்படவில்லை.

Share
தொடர்புடையது
articles2FeEKtDKWyXj0ebdxP7pcx
செய்திகள்உலகம்

வரலாற்று வெற்றி: அமெரிக்காவிடமிருந்து மீட்கப்படும் 3 பழைமைவாய்ந்த சோழர் காலச் சிலைகள்!

தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் இருந்து திருடப்பட்டு அமெரிக்காவிற்குக் கடத்தப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த மூன்று சோழர் காலச்...

image 3a35841713
செய்திகள்இலங்கை

இலங்கையின் சுகாதாரத் துறையில் புதிய திருப்பம்: அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒரே குழுவாக ஒன்றிணைந்து செயற்பட இணக்கம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று சபைக்கும் அனைத்து சுகாதார தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று...

rajith
செய்திகள்இலங்கை

ராஜித சேனாரத்ன மீதான ஊழல் வழக்கு: விசாரணையின் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு!

மீன்பிடித் துறைமுக மணல் அகழ்வுத் திட்டத்தில் அரசாங்கத்திற்குப் பாரிய நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் வழக்குத்...

images 1 8
செய்திகள்இலங்கை

சதொச வெள்ளைப்பூண்டு மோசடி: முன்னாள் விநியோக முகாமையாளர் உட்பட 3 பேர் கைது – பிணையில் விடுதலை!

2021 ஆம் ஆண்டு லங்கா சதொச நிறுவனத்தின் வெள்ளைப்பூண்டு கையிருப்பினை விற்பனை செய்ததில் அரசாங்கத்திற்கு 17...