நாட்டில் தற்போது அமுலில் இருக்ககும் ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டிற்காக 317 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரப்பகுதியில் இந்நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந் நடவடிக்கையின் போது 05 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 78,914 நபர்கள் ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment