0e4ffe5d23715f93a91b56f38191f9cc SmallRRRR
இலங்கைசெய்திகள்

அரிசியின் கட்டுப்பாட்டு விலை நீக்கம்! – வர்த்தமானியும் ரத்து

Share

அரசால் அரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த விலைக் கட்டுப்பாட்டை  அகற்ற  அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் முன் வெளியிடப்பட்ட  அரிசிக்கான அதிகபட்ச மொத்த விலை மற்றும் அதிகபட்ச சில்லறை விலையுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இன்று மாலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதனை விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

அத்துடன் சந்தையில் அரிசிக்கு ‘செயற்கை தட்டுப்பாடு’ ஏற்படாது தடுக்க ஒரு லட்சம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவையால் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தனவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கீரி சம்பா, வெள்ளை மற்றும் சிவப்பு சாம்பா, வெள்ளை மற்றும் சிவப்பு நாடு மற்றும் வெள்ளை மற்றும் சிவப்பு மூல அரிசி ஆகியவற்றுக்கு அதிகபட்ச சில்லறை விலையை விதிக்கும் வர்த்தமானி கடந்த செப்ரெம்பர் 02 ஆம் திகதி வெளியிடப்பட்டது.

எனினும், அதற்கான வர்த்தமானி அறிவிப்பு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு துறைமுகத்தில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்களை வெளியிடுவதற்கு மத்திய வங்கியிலிருந்து தேவையான நிதியை வழங்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
gold price6 1672379756
செய்திகள்இலங்கை

தங்க விலையில் திடீர் ஏற்றம்: பவுணுக்கு ரூ. 6,000 அதிகரிப்பு!

கடந்த வாரத்திலிருந்து எவ்வித மாற்றங்களும் இன்றி ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த தங்கத்தின் விலை,...

HK5OOCOO5VF7LD6ZPEDZS5GCQI
உலகம்செய்திகள்

எத்தியோப்பியாவில் 12,000 ஆண்டுகளுக்குப் பிறகு எரிமலை வெடிப்பு: மத்திய கிழக்கு விமான சேவை பாதிப்பு!

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஹெய்லி குப்பி (Hayli Gubbi) எரிமலை, சுமார்...

IMG 20240818 105431 800 x 533 pixel
செய்திகள்இலங்கை

தொடக்கப்பள்ளி மாணவி பாலியல் துஷ்பிரயோகம்: ஆசிரியரைக் கைது செய்யச் சிறப்புப் பொலிஸ் குழுக்கள் அமைப்பு!

பாடசாலை விடுமுறை நாட்களில் பயிற்சி வகுப்புகளை நடத்துவதாகக் கூறி மூன்றாம் ஆண்டு மாணவி ஒருவரைப் பாலியல்...

23 651d55bc70ebc
செய்திகள்இலங்கை

முல்லைத்தீவு கொக்காவில் இராணுவ முகாமில் துப்பாக்கிச் சூடு: இராணுவ வீரர் படுகாயம்!

முல்லைத்தீவு, கொக்காவில் 4-இல் அமைந்துள்ள இராணுவ ஆயுதப் புலனாய்வுப் படை முகாமில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச்...