24 66038fa01656a
இலங்கைசெய்திகள்

மைத்திரியின் வாக்குமூலம் தொடர்பில் நீதிமன்றம் அறிவித்தல்

Share

மைத்திரியின் வாக்குமூலம் தொடர்பில் நீதிமன்றம் அறிவித்தல்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வாக்குமூலம் தொடர்பில் இன்றைய தினம் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட உள்ளது.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் மைத்திரிபால சிறிசேனவிடம், குற்ற விசாரணைப் பிரிவினர் நீண்ட வாக்குமூலமொன்றை பெற்றுக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், தற்கொலைத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரிகள் பற்றிய விபரங்களை அம்பலப்படுத்துவதாக மைத்திரி கூறியிருந்தார்.

இந்த வாக்கு மூலம் தொடர்பில் நீதிமன்றிற்கு அறிவிக்கப்பட உள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மைத்திரிபால சிறிசேனவை நீதிமன்றிற்கு அழைத்து விசாரணை நடத்துமாறு கோர உள்ளதாகவும் சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வாக்கு மூலம் குறித்த அறிக்கையை குற்ற விசாரணைப் பிரிவினர், சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் ஒப்படைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 22
செய்திகள்உலகம்

ஈரான் விவகாரத்தில் டிரம்பின் தற்காலிகப் போர்நிறுத்தத்தின் பின்னணி!

வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், அதிபர் டொனால்ட் டிரம்ப் கடைபிடிக்கும் அணுகுமுறையை அரசியல்...

world 21
செய்திகள்உலகம்

மறைந்த தனது மனைவிக்காக நிலவில் பெயர் சூட்டிய விண்வெளி வீரர்!

சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவை நோக்கிப் பயணித்துள்ள நாசாவின் ‘ஆர்டெமிஸ் II’ விண்கலக் குழுவினர்,...

world 20
செய்திகள்உலகம்

இரு வார காலப் போர்நிறுத்தம்: ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறக்கத் தெஹ்ரான் சம்மதம்!

ஈரானின் உள்கட்டமைப்புகள் மீது பாரிய தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்திருந்த...

Untitled 102
செய்திகள்இலங்கை

ரூபவாஹினி கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் விளக்கமறியலில்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்ட, இலங்கை ரூபவாஹினி...