24 6601966673577
இலங்கைசெய்திகள்

ரணிலின் மாஸ்டர் பிளான் – பொறியில் சிக்கிய பசில் தரப்பினர்

Share

ரணிலின் மாஸ்டர் பிளான் – பொறியில் சிக்கிய பசில் தரப்பினர்

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க மறைமுக ஆதரவினை வழங்க முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதன் காரணமாக பல்வேறு பிரிவுகளை பிரிந்து வாக்குகளை பிரிப்பதை தவிர்க்கவும் வேட்பாளரை முன்வைக்காமல் இருப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் பசில் ராஜபக்ஷ தலைமையில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று கூடி கலந்துரையாடப்பட்டது.

இக்கட்டான காலங்களில் தனது கட்சி உறுப்பினர்களை பாதுகாத்த ரணில் விக்ரமசிங்கவை மறக்க முடியாது என பசில் ராஜபக்ச கருத்து தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்சவின் ஊடாக வேட்பாளரை நிறுத்தினால் அல்லது ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்காமல் இருப்பதற்கு கட்சி தீர்மானித்தால், அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையிலான அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் குழு கட்சியில் இருந்து பிரிந்து ரணிலுக்கு ஆதரவளிக்கும் என இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கட்சியின் ஒற்றுமைக்காக வேட்பாளர் ஒருவரை முன்வைக்கக் கூடாது என்பதே பசில் ராஜபக்சவின் கருத்தாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...