24 6600e08216cb1
இலங்கைசெய்திகள்

தனியார் கல்வி நிலையத்தில் கடும் மோதல் – பலர் காயம்

Share

தனியார் கல்வி நிலையத்தில் கடும் மோதல் – பலர் காயம்

குருநாகல், இப்பாகமுவ பிரதேசத்தில் தனியார் கல்வி நிலையத்தில் நேற்று இரவு இடம்பெற்ற மோதலில் 05 மாணவிகளும் 04 மாணவர்களும் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொகரெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்த ஒரு மாணவியும் மூன்று மாணவர்களும் குருநாகல் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவிலும், மேலும், 04 மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் பொல்கொல்ல பிரதேச வைத்தியசாலையிலும், அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இப்பாகமுவ, பக்மீகொல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த தனியார் கல்வி நிறுவனத்தில் கல்விப் பொதுத் தராதர பரீட்சையில், சித்தி பெறாத மாணவர்கள் கல்வியைப் பெற்று வருவதாகவும், இதன்போதே தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனினும், மோதலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொகரெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மரதானையில் 826 லீற்றர் டீசல் பறிமுதல்: இருவர் கைது!

செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் 826 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்ததற்காக, டி.ஆர். விஜேவர்தன மாவத்தையிலுள்ள மரதானா...

world
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தி முடக்கம்: ஐநா பாதுகாப்பு சபையில் பஹ்ரைன் அதிரடித் தீர்மானம்!

உலகளாவிய எரிசக்தி வர்த்தகத்தின் மிக முக்கியப் பாதையான ஹோர்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) ஈரான்...

Untitled 92
செய்திகள்உலகம்

‘அவரை மீட்டுவிட்டோம்’: ஈரானில் அமெரிக்க விமானி அதிரடி மீட்பு!

ஈரானிய வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்திலிருந்து குதித்து மாயமாகியிருந்த விமானி, ஒரு துணிச்சலான...

Untitled 91
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி: புதிய உரம் ஒதுக்கீட்டு முறை அறிமுகம்!

இலங்கை சந்தையில் உரத்தின் விலையினைக் கட்டுப்படுத்தி, விவசாயிகளுக்கு நியாயமான விலையில் தட்டுப்பாடின்றி உரம் கிடைப்பதை உறுதி...