24 65ff8bda2ed96
இலங்கைசெய்திகள்

இலங்கையில் தொலைத்தொடர்பு வரி வருவாய் அதிகரிப்பு

Share

இலங்கையில் தொலைத்தொடர்பு வரி வருவாய் அதிகரிப்பு

2023 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் தொலைத்தொடர்பு வரி மூலம் ஈட்டப்பட்ட வருமானம் 29.4 வீதத்தால் 13.8 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள நிதி முகாமைத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் தொலைத்தொடர்பு வரி வருவாய் 10.7 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதன்படி, ஜூன் 1, 2022 முதல் தொலைத்தொடர்பு வரி விகிதம் 11.25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக திருத்தப்பட்டமையே இதற்கு காரணம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த வருடம் (2023) முதல் ஆறு மாதங்களில் பயன்படுத்தப்படும் தொலைபேசி மற்றும் கைப்பேசிகளின் எண்ணிக்கை முறையே 19.4 சதவீதம் மற்றும் 5.3 சதவீதம் குறைந்துள்ளது.

2023 முதல் ஆறு மாதங்களில் தொலைப்பேசி இணைய இணைப்புகள் உட்பட இணைய சந்தாதாரர்களின் எண்ணிக்கை 1.0 சதவீதம் குறைந்து 21.9 மில்லியனாக உள்ளதாக அறிக்கை கூறுகிறது.

2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில், இலங்கையில் 100 பேருக்கு 146.9 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பிற தொலைபேசிகள் இருந்தன.

2023 ஆம் ஆண்டின் இந்த காலகட்டத்தில், 100 பேருக்கு கைப்பேசிகள் மற்றும் பிற தொலைபேசிகளின் எண்ணிக்கை 6.8 சதவீதம் குறைந்து 137 ஆக உள்ளமையும் தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....