24 65ff8bda2ed96
இலங்கைசெய்திகள்

இலங்கையில் தொலைத்தொடர்பு வரி வருவாய் அதிகரிப்பு

Share

இலங்கையில் தொலைத்தொடர்பு வரி வருவாய் அதிகரிப்பு

2023 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் தொலைத்தொடர்பு வரி மூலம் ஈட்டப்பட்ட வருமானம் 29.4 வீதத்தால் 13.8 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள நிதி முகாமைத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் தொலைத்தொடர்பு வரி வருவாய் 10.7 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதன்படி, ஜூன் 1, 2022 முதல் தொலைத்தொடர்பு வரி விகிதம் 11.25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக திருத்தப்பட்டமையே இதற்கு காரணம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த வருடம் (2023) முதல் ஆறு மாதங்களில் பயன்படுத்தப்படும் தொலைபேசி மற்றும் கைப்பேசிகளின் எண்ணிக்கை முறையே 19.4 சதவீதம் மற்றும் 5.3 சதவீதம் குறைந்துள்ளது.

2023 முதல் ஆறு மாதங்களில் தொலைப்பேசி இணைய இணைப்புகள் உட்பட இணைய சந்தாதாரர்களின் எண்ணிக்கை 1.0 சதவீதம் குறைந்து 21.9 மில்லியனாக உள்ளதாக அறிக்கை கூறுகிறது.

2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில், இலங்கையில் 100 பேருக்கு 146.9 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பிற தொலைபேசிகள் இருந்தன.

2023 ஆம் ஆண்டின் இந்த காலகட்டத்தில், 100 பேருக்கு கைப்பேசிகள் மற்றும் பிற தொலைபேசிகளின் எண்ணிக்கை 6.8 சதவீதம் குறைந்து 137 ஆக உள்ளமையும் தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...