24 65fe59887d217
உலகம்செய்திகள்

மகனுக்காக ரூ.640 கோடி செலவழித்து துபாயில் வீடு வாங்கிய அம்பானி

Share

மகனுக்காக ரூ.640 கோடி செலவழித்து துபாயில் வீடு வாங்கிய அம்பானி

உலக பணக்காரர்களின் ஒருவரான முகேஷ் அம்பானிக்கு துபாயில் இருக்கும் வீட்டினை எவ்வளவு பணம் கொடுத்து வாங்கினார் தெரியுமா?

அவ்வளவு கோடிகளில் இந்த வீட்டை வாங்குவதற்கான காரணம் என்ன எனவும் அந்த வீட்டில் உள்ள அம்சங்கள் குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.

உலகிலேயே ஆடம்பர வாழ்க்கை முறைக்கு பெயர் போன நாடு துபாய்.

ரஷ்யாவில் உள்ள பணக்காரர்கள் முதல் இந்தியாவில் உள்ள பணக்காரர்கள் வரை அனைவரும் துபாயில் ஆடம்பரமான வீடுகளை வாங்கி வருகின்றார்கள்.

அந்தவகையில் உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி தனது மனைவியுடன் சேர்ந்து துபாயில் வீடு ஒன்றை வாங்கியிருந்தார்.

துபாயின் பாம் ஜூமெய்ராவில் உள்ள சொகுசு வில்லா ஒன்றை தான் முகேஷ் அம்பானி வாங்கியுள்ளார்.

இந்த வீட்டை தனது இளைய மகனான அதாவது புதிய கல்யாண மாப்பிள்ளையான ஆனந்த் அம்பானிக்காக வாங்கியுள்ளார்.

இந்த வீடானது பாம் ஜுமேரா செயற்கை தீவில் அமைந்துள்ளது.

இந்த மாளிகையில் மொத்தம் பத்து படுக்கையறைகள், ஒரு தனியார் ஸ்பா மற்றும் உட்புற மற்றும் வெளிப்புற குளங்கள் உள்ளன.

ஆடம்பரமான வில்லா இத்தாலிய பளிங்கு மற்றும் அழகான அதிநவீன தலைசிறந்த படைப்புகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த மாளிகையானது 26,033 சதுர அடி பரப்பளவில் காணப்படுகிறது.

வீட்டில் 70 மீட்டர் தொலைவில் கடற்கரைக்கு செல்லலாம்.

இதனுடன், இரண்டு மாடி மாளிகையில் ஏழு ஸ்பா வசதிகள், உட்புற சலூன் மற்றும் பார் உள்ளது.

இதற்காக அவர் 80 மில்லியன் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 640 கோடி ரூபாய் செலவழித்துள்ளார் என கூறப்படுகிறது.

இந்த வீட்டின் அருகில் பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் வீடு, பிரிட்டிஷ் கால்பந்து வீரர் டேவிட் பெக்கம் உள்ளிட்ட பிரபலங்களின் வீடுகளும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...