24 65fe5f4641563
உலகம்செய்திகள்

இளவரசி கேட்டுக்கு புற்றுநோய் பாதிப்பு: மௌனம் காத்தது ஏன்?

Share

இளவரசி கேட்டுக்கு புற்றுநோய் பாதிப்பு: மௌனம் காத்தது ஏன்?

இளவரசி கேட், தனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளியிட்டுள்ள தகவல், ராஜ குடும்ப ரசிகர்களையும், பிரித்தானிய மக்களையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிரித்தானிய இளவரசி கேட், ஜனவரி மாதம் உடல் நலம் பாதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார். ஆனால், அதற்குப் பின் அவரைக் குறித்து எந்த செய்தியும் வெளியாகாததால், அவருக்கு என்ன ஆயிற்று என உண்மையாகவே அக்கறையுடன் ஒரு கூட்டமும், ஆர்வத்துடன் ஒரு கூட்டமும் யோசிக்கத் துவங்க, அவரைக் குறித்த வதந்திகள் பரவத்துவங்கின.

அவர் இறந்துவிட்டார், வில்லியமைப் பிரிந்துவிட்டார் என்றெல்லாம் கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல், ஊடகங்கள் எழுதவும், கேலி பேசவும் செய்தன.

இந்நிலையில், தனக்கு புற்றுநோய் தாக்கியுள்ளதாகவும், தான் அதற்கான சிகிச்சையிலிருப்பதாகவும் தெரிவித்துள்ளார் இளவரசி கேட். வெளியான அந்த செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய அதே நேரத்தில், ஏன் இவ்வளவு நாட்களாக அந்த செய்தி வெளியிடப்படவில்லை என்ற கேள்வியும் எழுந்தது.

கேட், நாட்டுக்கு இளவரசி என்றாலும், தன் பிள்ளைகளுக்குத் தாய். அந்த சின்னஞ்சிறு பிள்ளைகளால், தங்கள் அன்புத் தாய்க்கு புற்றுநோய் என்ற செய்தியை எப்படித் தாங்கிக்கொள்ளமுடியும்?

ஆகவேதான், இளவரசிக்கு புற்றுநோய் என்னும் செய்தியை வெளியிட அரண்மனை வட்டாரம் தாமதப்படுத்திவந்ததாக தற்போது அவரது நலம் விரும்பிகள் கூறுகிறார்கள்.

அத்துடன், கேட் வில்லியமுக்கிடையிலான அன்பும் உலகம் அறிந்ததே. ஆகவேதான், தன் மனைவிக்கு உடல் நல பாதிப்பு என தெரியவந்ததும், முக்கியமான நிகழ்ச்சிகளை ரத்து செய்டுவிட்டு தன் மனைவியின் அருகில் அவருக்கு ஆதரவாக இருப்பதற்காக ஓடியிருக்கிறார் இளவரசர் வில்லியம்.

இதுவரை இளவரசியை மோசமாக கேலி செய்தவர்களும், விமர்சனம் செய்தவர்களும் இப்போது தங்கள் முகத்தை எங்கே கொண்டு வைத்துக்கொள்ளப்போகிறார்கள் என்கிறார்கள் அவரது நலம் விரும்பிகள்!

Share
தொடர்புடையது
European Union ggg
உலகம்உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்

ஐரோப்பிய ஒன்றியம், கூகுள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், ஐரோப்பிய...

arrested woman with handcuffs
உலகம்

நேட்டோவை உளவு பார்த்த சீன பெண்!

பெல்ஜியத்தின் மான்ஸ் பகுதியில் அமைந்துள்ள ‘ஷேப்’ எனப்படும் நேட்டோ இராணுவத் தலைமையகத் தளத்தில் பயிற்சிப் பணியாளராக...

உமா குமரன்
உலகம்

பிரித்தானிய அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பில் ஈழத்தமிழ்ப் பெண்

இலங்கைத் தமிழரான உமா குமரன், பிரித்தானியாவின் வெளிநாட்டு அமைச்சகத்தில் இணை அமைச்சராக பதவி வகித்து வந்த...

us troops
உலகம்உலகம்

ஈரானின் தாக்குதல்களில் அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி.

ஜோர்டானில் ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன்...