download 1
உலகம்செய்திகள்

நிலவில் தொடருந்து போக்குவரத்தை உருவாக்க அமெரிக்கா திட்டம்

Share

நிலவில் தொடருந்து போக்குவரத்தை உருவாக்க அமெரிக்கா திட்டம்

அறிவியலின் அடுத்த பரிணாமத்தை வெளிப்படுத்தும் முகமாக நிலவில் தொடருந்து போக்குவரத்தை உருவாக்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது.

அமெரிக்காவில் மேம்பட்ட தொழில்நுட்பத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு உருவாக்கப்பட்ட அமைப்பான தர்ப்பா(DARPA) நிறுவனம் இந்த ஒப்பந்தத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் மனிதரை நிலவுக்கு கொண்டு செல்ல உதவிய பல தொழில்நுட்பங்களின் உந்து சக்தியாக குறித்த அமைப்பு இருந்துள்ளது.

நார்த்ரோப் க்ரம்மன் எனும் நிறுவனத்துடன் நிலவில் தொடருந்து போக்குவரத்து அமைப்பை உருவாக்குவதற்கான ஒரு கருத்தை உருவாக்குவதற்கும், அதை முன்னெடுத்து செல்லவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் மனிதர்கள், பொருட்கள் மற்றும் வளங்களை சந்திர மேற்பரப்பின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்ல பயன்படுத்தலாம் என அமெரிக்கா கூறியுள்ளது.

அத்துடன் வளர்ந்து வரும் அமெரிக்காவின் விண்வெளி பொருளாதாரத்திற்கு பங்களிக்க முடியும். இதற்காக நார்த்ரோப் க்ரம்மன் நிறுவனம் புதிய ஆய்வை மேற்கொள்கிறது.

முதலில் நிலவில் தொடருந்து அமைப்பு உருவாக்க தேவைப்படும் இடைமுகங்கள் மற்றும் வளங்களை வரையறுக்க வேண்டும் எனவும், பின்னர், அது எதிர்பார்க்கக்கூடிய செலவு,. தொழில்நுட்ப மற்றும் தளவாட அபாயங்களின் பட்டியலையும் அந்நிறுவனம் தயார் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...