download 1
உலகம்செய்திகள்

நிலவில் தொடருந்து போக்குவரத்தை உருவாக்க அமெரிக்கா திட்டம்

Share

நிலவில் தொடருந்து போக்குவரத்தை உருவாக்க அமெரிக்கா திட்டம்

அறிவியலின் அடுத்த பரிணாமத்தை வெளிப்படுத்தும் முகமாக நிலவில் தொடருந்து போக்குவரத்தை உருவாக்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது.

அமெரிக்காவில் மேம்பட்ட தொழில்நுட்பத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு உருவாக்கப்பட்ட அமைப்பான தர்ப்பா(DARPA) நிறுவனம் இந்த ஒப்பந்தத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் மனிதரை நிலவுக்கு கொண்டு செல்ல உதவிய பல தொழில்நுட்பங்களின் உந்து சக்தியாக குறித்த அமைப்பு இருந்துள்ளது.

நார்த்ரோப் க்ரம்மன் எனும் நிறுவனத்துடன் நிலவில் தொடருந்து போக்குவரத்து அமைப்பை உருவாக்குவதற்கான ஒரு கருத்தை உருவாக்குவதற்கும், அதை முன்னெடுத்து செல்லவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் மனிதர்கள், பொருட்கள் மற்றும் வளங்களை சந்திர மேற்பரப்பின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்ல பயன்படுத்தலாம் என அமெரிக்கா கூறியுள்ளது.

அத்துடன் வளர்ந்து வரும் அமெரிக்காவின் விண்வெளி பொருளாதாரத்திற்கு பங்களிக்க முடியும். இதற்காக நார்த்ரோப் க்ரம்மன் நிறுவனம் புதிய ஆய்வை மேற்கொள்கிறது.

முதலில் நிலவில் தொடருந்து அமைப்பு உருவாக்க தேவைப்படும் இடைமுகங்கள் மற்றும் வளங்களை வரையறுக்க வேண்டும் எனவும், பின்னர், அது எதிர்பார்க்கக்கூடிய செலவு,. தொழில்நுட்ப மற்றும் தளவாட அபாயங்களின் பட்டியலையும் அந்நிறுவனம் தயார் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 5
செய்திகள்இலங்கை

ஏர்பஸ் ஊழல் விசாரணை: முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு அழைப்பாணை விடுக்கப்படவில்லை என ஊடகப் பேச்சாளர் விளக்கம்!

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொள்முதல் ஊழல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ...

Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலைகள் அதிரடி உயர்வு: இன்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது...