24 65fe4d72a3e87
இலங்கைசெய்திகள்

பொலித்தீன் பைகளை பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி

Share

பொலித்தீன் பைகளை பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி

பொலித்தீன் பைகளை பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு விசேட தள்ளுபடியை வழங்குமாறு சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான அபிவிருத்திக்கான துறைசார் கண்காணிப்புக்குழு விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மேற்படி குழுவின் தலைவரும், கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அஜித் மான்னப்பெரும, நேற்று (22) இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடி தீர்மானமொன்றை அறிவித்துள்ளார்.

இதற்கிடையில், பொலித்தீன் பைகளை எடுத்துச்செல்லாத வாடிக்கையாளர்களுக்கு ஐந்து ரூபாய் தள்ளுபடி வழங்குவதற்கு முக்கிய விற்பனை நிலைய (சுப்பர் மார்க்கெட்) உரிமையாளர்கள் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதேவேளை, பிளாஸ்டிக் போத்தல்களில் கியுஆர் குறியீட்டை அறிமுகப்படுத்துவது தொடர்பில் ஆலோசிப்பதற்காக சுற்றாடல் அதிகார சபையின் தலைவர்கள் மற்றும் நீர் மற்றும் பான உற்பத்தியாளர்கள் குழுவின் முன்னிலையில் கடந்த 2 ஆம் திகதி அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...

world 49
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பகல் நேர கடும் வெப்பத்தைத் தொடர்ந்து இடியுடன் கூடிய மழை: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

இலங்கையின் பல பகுதிகளில் பகல் நேரங்களில் கடுமையான வெப்பம் நிலவி வரும் சூழலில், பிற்பகல் வேளைகளில்...

world 48
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள், மின்சார விலைகளில் மாற்றம்? புதிய விலை சூத்திரத்தை அறிமுகம் செய்ய திட்டம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் உலகளாவிய ரீதியில் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ள நிலையில், உள்நாட்டிலும்...

world 47
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2.2 பில்லியன் நிலக்கரி கொள்முதல் மோசடி: சட்டமா அதிபர் ஒப்புதலின்றி ஒப்பந்தம் கையெழுத்து!

டிரைடென்ட் கெம்பார் லிமிடெட் (Trident Kembar Ltd) நிறுவனத்திடமிருந்து நிலக்கரி கொள்முதல் செய்ததில் நிகழ்ந்துள்ள பாரிய...