school
செய்திகள்இலங்கை

டிசம்பர் மாதம் விடுமுறை வழங்கப்படாது! கல்வி அமைச்சு

Share

ஒக்டோபர் மாதம் தொடக்கம் பாடசாலைகளை கட்டங்கட்டமாக திறக்க எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா  தெரிவித்துள்ளார்.

அவ்வாறு பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டால் வழமையாக வழங்கப்படுகின்ற டிசம்பர் மாத விடுமுறை இந்த முறை வழங்கப்படமாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலைகள் அனைத்தும் நான்கு கட்டங்களாக ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது

இதன்படி 200 மாணவர்களுக்கு குறைவானவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகளை விரைவாக திறக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையில் 200 மாணவர்களை விட குறைவானவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகள் 5, 131 உள்ளன. இதில் தரம் ஒன்று முதல் தரம் ஐந்து வரையான வகுப்புகள் உள்ள பாடசாலைகளின் எண்ணிக்கை 3, 884 எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவ்வகையில் 1-5 வரையான வகுப்புக்களுள்ள பாடசாலைகளை மீண்டும் திறக்கமுடியுமென நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4 1
அரசியல்இலங்கைசெய்திகள்

உங்களது ஆட்சிக்காலத்திலேயே காணிகளை விடுவியுங்கள்: ஜனாதிபதியிடம் நாகதீப விகாராதிபதி நேரில் வலியுறுத்தல்!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தனியார் காணிகளை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர...

25 68ed5a882ec6d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரவதை செய்த பொலிஸ் பரிசோதகருக்கு 7 ஆண்டுகள் சிறை: மொனராகலை மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும் கொடூரமாகச் சித்திரவதை செய்த குற்றத்திற்காகப் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு...

645574 4228922 updates
உலகம்செய்திகள்

அண்டார்டிகா பனிக்கடியில் ஒளிந்திருக்கும் மர்ம உலகம்: அதிநவீன செயற்கைக்கோள் மூலம் புதிய வரைபடம் வெளியீடு!

அண்டார்டிகாவை மூடியுள்ள பல்லாயிரக்கணக்கான அடி ஆழமான பனிப்படலத்திற்குக் கீழே மறைந்திருக்கும் நிலப்பரப்பு குறித்து சர்வதேச விஞ்ஞானிகள்...

articles2FFE3TpF1W8KlSV5Uh5Ngm
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் தண்டவாளத்தில் ரயில்கள்: திருகோணமலை, மட்டக்களப்பு இரவு நேர சேவைகள் ஜனவரி 20 முதல் ஆரம்பம்!

திட்வா (Titwa) புயல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான இரவு...