tamilni 374 scaled
உலகம்ஏனையவைசெய்திகள்

பஞ்சு மிட்டாய்க்கு தடை விதித்த மற்றொரு மாநிலம்

Share

பஞ்சு மிட்டாய்க்கு தடை விதித்த மற்றொரு மாநிலம்

பஞ்சு மிட்டாய்.. இந்தப் பெயரைக் கேட்டாலே குழந்தைகள் துள்ளிக் குதிக்கின்றன. வாயில் கரையும் இந்த பஞ்சு மிட்டாய் சாப்பிடுவதில் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஆனால் இந்தியாவில் பல மாநிலங்கள் சமீபத்தில் இந்த பஞ்சு மிட்டாய்க்கு தடை விதித்துள்ளன.

பஞ்சு மிட்டாய்களில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள் இருப்பதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளதால், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்கள் விற்பனைக்கு ஏற்கனவே தடை விதித்துள்ளன.

இப்போது சமீபத்தில் ஹிமாச்சல பிரதேசமும் இந்த பஞ்சு மிட்டாய்க்கு தடை விதித்துள்ளது.

அதன் உற்பத்தி, சேமிப்பு மற்றும் விற்பனையை தடை செய்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த தடை ஒரு வருடத்திற்கு (மே 15, 2025 வரை) அமுலில் இருக்கும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட பஞ்சு மிட்டாய் மாதிரிகளை சோதனை செய்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள், அவற்றில் ஆபத்தான நிறங்கள் சேர்க்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இவை உணவுப் பாதுகாப்புத் தரங்களுக்கு எதிரானவை என்று அறிக்கை வெளிப்படுத்தியது.

இவை பொது சுகாதாரத்தில், குறிப்பாக சிறு குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கடுமையான பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இவற்றை விற்பனை செய்ய தடை விதிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share
தொடர்புடையது
05 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தனியார் பஸ் சேவைகளை முறைப்படுத்தக் கோரிக்கை: அத்தியாவசியமற்ற நேரங்களில் சேவைகளைக் குறைக்கத் திட்டம்

நாட்டில் நிலவும் சூழலைக் கருத்திற்கொண்டு, தனியார் பஸ்களின் பயண நேரங்களை முறைப்படுத்துமாறும், பயணிகள் வருகை குறைவாக...

02 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி சேமிப்பு நடவடிக்கை: ஒவ்வொரு புதன்கிழமையும் பொது விடுமுறையாக அறிவிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு,...

01 16
செய்திகள்உலகம்

காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 400 பேர் உயிரிழப்பு என தலிபான் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400...

21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...