tamilnih 13 scaled
இலங்கைசெய்திகள்

புத்தாண்டு காலத்தில் மரக்கறி விலைகளில் மாற்றம்

Share

புத்தாண்டு காலத்தில் மரக்கறி விலைகளில் மாற்றம்

மரக்கறிகளின் விலை கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் மேலும் குறைந்துள்ளதாக கெப்பட்டிபொல விசேட பொருளாதார நிலைய வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

சில மாதங்களாக மரக்கறிகளின் விலை 500 முதல் 1500 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டதாகவும், தற்போது பெரும்பாலான மரக்கறிகளின் விலை 200 ரூபாவிற்கும் குறைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், கெப்பட்டிபொல விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைக்கும் மரக்கறிகளின் தொகையில் அதிகரிப்பு காணப்படுவதாகவும், சிங்கள புத்தாண்டு காலத்திலும் விலை மேலும் வீழ்ச்சியடையும் என்றும் தெரிவித்துள்ளனர்.

தற்போது முள்ளங்கியை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஏனைய காய்கறிகளின் விலையும் குறைந்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளின் விலை உயர்வு, கூலி போன்றவற்றால் விவசாய செய்கைக்கு செலவழித்த பணத்தைக் கூட கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, அரசு தலையிட்டு, இரசாயன உரம் உள்ளிட்ட விவசாய பொருட்களின் விலையை குறைத்தால் நுகர்வோருக்கு குறைந்த விலையில் காய்கறிகள் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

தற்போது கெப்பட்டிபொல விசேட பொருளாதார நிலையத்தில் ஒரு கிலோ மரக்கறிகளின் மொத்த விலை பின்வருமாறு.

போஞ்சி ரூ.150 – 170, முட்டை கோவா ரூ.280 – 250, தக்காளி ரூ.200 – 240, கத்தரிக்காய் ரூ.180 – 150, கரட் ரூ.280 – 250, பீட்ரூட் ரூ.200 – 250, பச்சை மிளகாய் ரூ.250 – 240, மிளகாய் ரூ.50 – 240 , முள்ளங்கி ரூ.50 – 20, லீக்ஸ் ரூ.180 – 160, நோகோல் ரூ.150 – 120 வரையும் விற்பனை செய்யப்படுகின்றது.

Share
தொடர்புடையது
world 180
செய்திகள்உலகம்

உலக நிதிச் சந்தைகளுக்கு எச்சரிக்கை: மத்திய கிழக்கு போரினால் அதிகரிக்கும் அபாயங்கள்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல், உலகளாவிய நிதி நிலைத்தன்மைக்கு (Global Financial Stability) முன்னெப்போதும்...

world 179
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லவாயவில் பயங்கரம்: காதலனால் இளம் பெண் வெட்டிக்கொலை!

வெல்லவாய, நெட்டோலகம பகுதியில் 32 வயதுடைய திருமணமான பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொடூரமான...

world 178
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் பாதுகாக்கப்பட்ட 238 ஈரானியர்கள் தாயகம் திரும்பினர்: விசேட விமானம் மூலம் ஈரானுக்குப் பயணம்!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான கப்பல்களில் இருந்து மீட்கப்பட்டு, இலங்கையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த மொத்தம்...

world 177
செய்திகள்உலகம்

போப்பின் விமர்சனங்களுக்கு ஜே.டி. வேன்ஸ் பதிலடி: இறையியல் விவகாரங்களில் போப் கவனமாக இருக்க வேண்டும்

அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் போர் நடவடிக்கைகள் குறித்து போப் லியோ XIV (Pope Leo...