tamilni 334 scaled
உலகம்செய்திகள்

பசியில் வாடும் காசா மக்கள்! முதல்முறையாக வந்திறங்கிய 200 டன் உணவுகள்

Share

பசியில் வாடும் காசா மக்கள்! முதல்முறையாக வந்திறங்கிய 200 டன் உணவுகள்

முதல்முறையாக கடல் வழி மார்க்கமாக அனுப்பப்பட்ட உதவி தொகுப்புகள் காசாவின் கடற்கடையில் வந்து இறங்கியுள்ளன.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் மத்தியில் போர் நிடித்து வரும் நிலையில், கிட்டத்தட்ட 23 லட்சம் காசா மக்கள் உணவு மற்றும் மருத்துவப் பொருட்களின் பற்றாக்குறையால் அவதிப்பட்டு வருகின்றனர்.

அதே நேரத்தில், இஸ்ரேலின் கடுமையான தடை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தரைவழி மற்றும் வான்வழி போக்குவரத்துகள் மூலம் உதவிப் பொருட்கள் வழங்குவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

எனவே, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், கப்பல் மூலம் காசா மக்களுக்கு உணவு, குடிநீர், மருந்து மற்றும் தற்காலிக தங்குமிடங்கள் ஆகிய உதவிப் பொருட்களை வழங்குவதற்காக மத்திய தரைக்கடல் பகுதியான காசா கடற்கரையில் தற்காலிக மிதக்கும் துறைமுகம் அமைக்கப்படும் என அறிவித்தார்.

ஜோ பைடனின் உத்தரவுப்படி, காசா கடற்கரையில் தற்காலிக மிதக்கும் துறைமுகத்தை அமெரிக்க ராணுவ வீரர்கள் கட்டியெழுப்பினர்.

இந்நிலையில் கடல் வழி மார்க்கமாக அனுப்பப்பட்ட உதவிப் பொருட்கள் முதல்முறையாக காசா கடற்கடையில் தற்போது வந்து இறங்கியுள்ளது.

இதனை ஐக்கிய அமீரக நாடுகள்(United Arab Emirates) ஒத்துழைப்புடன் அமெரிக்க தொண்டு நிறுவனமான World Central Kitchen (WCK) வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

தற்போது காசா கடற்கரைக்கு வந்து இறங்கியுள்ள உதவிக் கப்பல், காசா மக்களுக்கு மிகவும் தேவையான 200 டன் உணவுகளை கொண்டு வந்துள்ளன என தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் இஸ்ரேல் மிகப்பெரிய தடையாக உள்ளது என தொண்டு நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை இஸ்ரேல் தீவிரமாக மறுத்துள்ளது.

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...