BANDU
இலங்கைசெய்திகள்

பந்துலவிடம் சி.ஐ.டி விசாரணை

Share

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தனவிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் 4 மணிநேர விசாரணை நடைபெற்றுள்ளது.

சதொச நிறுவனத்தில் இரு வெள்ளைப்பூண்டு கொள்கலன்கள் வேறு தரப்பினருக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் பந்துல விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் வெள்ளைப்பூண்டு கொள்கலன்கள் வேறு தரப்பினருக்கு விற்கப்பட்டன எனக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அமைச்சர் பந்துல குணவர்தன பொலிஸ்மா அதிபரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

இது குறித்து வர்த்தக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில்,

நுகர்வோர் அதிகார சபை பணிப்பாளர் ஊடகங்களுக்கு வெளியிட்ட தகவல்கள் மற்றும் தரவுகள் தொடர்பில் முழுமையான ஆதாரங்களை குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு வழங்க அமைச்சர் பந்துல குணவர்த்தன நடவடிக்கை எடுத்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
07
செய்திகள்உலகம்

உக்ரைன் போரின் 4-வது ஆண்டு நிறைவு: புதினால் எங்களை உடைக்க முடியவில்ல – அதிபர் ஜெலென்ஸ்கியின் தீர்க்கமான உரை!

ரஷ்யா தனது ‘சிறப்பு ராணுவ நடவடிக்கை’யைத் தொடங்கி இன்றுடன் நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், உக்ரைன்...

06
செய்திகள்உலகம்

ஈரான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: காய்கறிச் சந்தையில் விழுந்து நொறுங்கியதில் 4 பேர் உயிரிழப்பு

ரான் நாட்டின் மத்திய மாகாணமான இஸ்பஹானில் (Isfahan), அந்நாட்டு ராணுவத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று இன்று...

05
செய்திகள்அரசியல்இலங்கை

26,000 ஊழியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி! – MAS நிறுவன ஆலைகள் மூடல் குறித்து சஜித் பிரேமதாச கடும் கவலை!

இலங்கையின் ஆடை உற்பத்தித் துறையில் முன்னணியில் உள்ள MAS Holdings நிறுவனத்திற்குச் சொந்தமான இரண்டு தொழிற்சாலைகள்...

04
செய்திகள்இந்தியா

ஜார்க்கண்டில் கோர விபத்து: ஏர் அம்புலன்ஸ் விழுந்து நொறுங்கியது – நோயாளி, மருத்துவர் உட்பட 7 பேர் பலி!

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலிருந்து டெல்லி நோக்கி ஒரு நோயாளியை ஏற்றிச் சென்ற ரெட் பேர்ட் ஏர்வேஸ்...