mil
இலங்கைசெய்திகள்

பால்மா தட்டுப்பாடு! – பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை

Share

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பால்மா தட்டுப்பாட்டுக்கு தீர்வாக பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதனை கால்நடை, கமநல சேவை அபிவிருத்தி, பால் மற்றும் முட்டை தொடர்பான கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் டீ.பீ.ஹேரத் தெரிவித்துள்ளார்.

சந்தையில் காணப்படுகின்ற பால்மா தட்டுப்பாட்டுக்கு தீர்வாக பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அத்துடன் கொரோனாப் பரவல் காரணமாக நாடு பொருளாதார நெருக்கடியில் உள்ள நிலையில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் சர்வதேச சந்தைகளில் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் உள்ளூர் சந்தைகளில் பால்மாவுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது .

மேலும் இறக்குமதியில் காணப்படுகின்ற சிக்கல்களும் இதற்குக் காரணமாக அமைகின்றது.

இதனால் நாட்டில் திரவப் பால் உற்பத்தியை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கென கால்நடை வளர்ப்பாளர்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...