tamilni 275 scaled
இலங்கைசெய்திகள்

வங்கிகளில் கடன் பெறவுள்ளவர்களுக்கு அறிவுறுத்தல்

Share

வங்கிகளில் கடன் பெறவுள்ளவர்களுக்கு அறிவுறுத்தல்

வங்கி ஒப்பந்தப் படிவங்கள் ஆங்கில மொழியில் மாத்திரம் வழங்கப்பட்டால் அதில் கைச்சாத்திட வேண்டாம் என இலங்கை ஐக்கிய தேசிய வர்த்தகக் கூட்டமைப்பின் (SLUNBA) பிரதித் தலைவர் சுசந்த லியனாராச்சி தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த அறிவுறுத்தலை வர்த்தகர்களுக்கும், பொது மக்களுக்கும் வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று முதல் ஆங்கில கடன் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட வேண்டாம்.

டிசம்பர் 15ஆம் திகதி வரை வங்கிகளின் பராட் உரிமையை நிறுத்தி வைக்க அமைச்சரவை முடிவு செய்த பின், வங்கிகள் மக்களின் சொத்துக்களை கையகப்படுத்தியுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நாட்டிற்குள் கணிசமான எண்ணிக்கையிலான வங்கிகள் இயங்கி வருவதால், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMEs) தங்களுக்கு கடன் வழங்க முடியாவிட்டால், அந்த வங்கிகளை உடனடியாக மூடுவதற்கான குறிப்புகளை வெளியிடுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

இலங்கை வங்கியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுடன் வியாபாரம் செய்ய முடியாவிட்டால், வங்கிகளை மூட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...