tamilni 272 scaled
உலகம்செய்திகள்

2025க்குள் 10 மில்லியன் ஹியூமனாய்டு ரோபோக்கள்: சீனாவின் எதிர்கால கனவு இதுதான்!

Share

2025க்குள் 10 மில்லியன் ஹியூமனாய்டு ரோபோக்கள்: சீனாவின் எதிர்கால கனவு இதுதான்!

2025க்குள் ஹியூமனாய்ட் ரோபோக்களை பெருவாரியாக உற்பத்தி செய்ய சீனா திட்டமிட்டுள்ளது.

மனித வடிவ ரோபோட் (Humanoid Robot) துறையில் முன்னோடியாக இருப்பதற்கான திட்டவட்டமான திட்டத்தை சீனா அறிவித்துள்ளது.

அந்த வகையில், தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MIIT) 2025ஆம் ஆண்டுக்குள் ஹியூமனாய்டு ரோபோக்கள் உருவாக்கம் மற்றும் பெருமளவு உற்பத்தி செய்வதற்கான செயல் திட்டத்தை வெளியிட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளில் நாட்டில் 10,000 ஊழியர்களுக்கு 500 மனித வடிவிலான ரோபோக்கள் இருக்க வேண்டும், அதாவது 10 மில்லியன் ரோபோக்கள் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன்கள் போலவே, ஹியூமனாய்டு ரோபோக்களும் தொழில்துறைகளையும் நம் வாழ்க்கை முறையையும் புரட்சிகரமாக மாற்றும் என்று MIIT கணித்துள்ளது.

மேலும், 2025 ஆம் ஆண்டுக்குள் இந்த ரோபோக்கள் “முன்னேறிய நிலையை” அடைய வேண்டும் என்று இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்த ரோபோட் தொழில்நுட்பத்தின் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் உற்பத்தித் துறையையும், மனித வாழ்க்கையையும் முற்றிலும் மாற்றும் என்று சீனாவின் அமைச்சகம் கூறுகிறது.

2027 ஆம் ஆண்டுக்குள் குறிப்பாக ஹியூமனாய்டு ரோபோட் உற்பத்திக்கான வலுவான விநியோக சங்கிலியை (supply chain)செய்யவும், சீனாவின் பொருளாதாரத்தில் மனித உருவங்கள் கொண்ட ரோபோக்களின் பங்கு முக்கியமானதாக இருக்க வேண்டும் என்றும் சீன அமைச்சகம் நோக்கம் கொண்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
Untitled 102
செய்திகள்இலங்கை

ரூபவாஹினி கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் விளக்கமறியலில்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்ட, இலங்கை ரூபவாஹினி...

Untitled 101
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வத்தளை நாயக்ககந்த பாடசாலையில் புதிய முதல்வர் நியமனத்திற்கு எதிர்ப்பு போராட்டம்!

வத்தளை, நாயக்ககந்த பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கத்தோலிக்க மகளிர் பாடசாலையான பாலிகா மகா வித்தியாலயத்திற்கு (குட்...

Untitled 100
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை: ஈரானின் மஷ்ஹத் நகரில் ரயில் சேவைகள் அதிரடி நிறுத்தம்!

ஈரானின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய நகரமான மஷ்ஹத்தின் (Mashhad) ஆளுநர், அந்த நகரில் உள்ள...

Untitled 99
செய்திகள்இலங்கை

சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப உள்நாட்டு எரிவாயு விலையில் மாற்றம்: தட்டுப்பாடின்றி வழங்க அமைச்சர் உறுதி!

உலகளாவிய சந்தையில் எரிவாயு விலையில் ஏற்பட்ட திடீர் உயர்விற்கு இணையாக, இலங்கையிலும் உள்நாட்டு எரிவாயு விலைகள்...