tamilni 181 scaled
உலகம்செய்திகள்

சிவப்பு கடலில் பதற்றம்! ஹவுதி ட்ரோன்களை சுட்டு வீழ்த்த அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா

Share

சிவப்பு கடலில் பதற்றம்! ஹவுதி ட்ரோன்களை சுட்டு வீழ்த்த அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா

ஏமன் கடல் பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்திய ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ட்ரோன்களை அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய படைகள் முறியடித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை சிவப்பு கடல் பகுதியில் சுற்றித் திரிந்த ஆளில்லா ட்ரோன் விமானங்களில் (UAVs) குறைந்தது 28 ட்ரோனகளை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தி இருப்பதாக தெரிவித்துள்ளது.

வணிக கப்பலுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பெரிய தாக்குதல் குறித்து அறிந்த பிறகு, கூட்டணி படைகளுடன் இணைந்து பதிலடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க தெரிவித்துள்ளது.

மேலும் இந்த மோதலின் போது அமெரிக்க கப்பலுக்கு எத்தகைய பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், ஆனால் வணிக கப்பல் சேதம் குறித்து இன்னும் அறிக்கைகள் இல்லை என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Propel Fortune என்ற வணிக கப்பலையும், சில அமெரிக்க ராணுவ கப்பலையும் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹவுதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பிரித்தானிய பாதுகாப்பு துறை செயலர் Grant Shapps, ஹவுதி படைகளால் வெள்ளிக்கிழமை இரவு ஏவப்பட்ட இரண்டு ட்ரோன்கள் Royal Navy frigate HMS Richmond மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளர்.

அத்துடன், உயிர் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வழித்தட சுதந்திரத்திற்காக பிரித்தானியா மற்றும் அதன் கூட்டுப் படைகள் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அதே சமயம், பிரான்ஸின் போர் கப்பல்கள் மற்றும் ஜெட் விமானங்கள் இணைந்து, 4 ஹவுதி ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளன.

இவை Aden வளைகுடா பகுதியில் இழுத்து செல்லப்பட்ட ஐரோப்பிய கடற்படை கப்பல் மற்றும் சரக்கு கப்பலை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பிரித்தானிய பாதுகாப்பு துறை செயலர் Grant Shapps, ஹவுதி படைகளால் வெள்ளிக்கிழமை இரவு ஏவப்பட்ட இரண்டு ட்ரோன்கள் Royal Navy frigate HMS Richmond மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளர்.

அத்துடன், உயிர் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வழித்தட சுதந்திரத்திற்காக பிரித்தானியா மற்றும் அதன் கூட்டுப் படைகள் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அதே சமயம், பிரான்ஸின் போர் கப்பல்கள் மற்றும் ஜெட் விமானங்கள் இணைந்து, 4 ஹவுதி ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளன.

இவை Aden வளைகுடா பகுதியில் இழுத்து செல்லப்பட்ட ஐரோப்பிய கடற்படை கப்பல் மற்றும் சரக்கு கப்பலை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலாக பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...

mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...

21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு...

539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...