01 COVID
இலங்கைசெய்திகள்

நவம்பரில் நாடு வழமைக்கு திரும்பும் –சன்ன ஜெயசுமன

Share

நாட்டில் தற்போது பதிவாகும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் இறப்பு வீதம் குறைவடைந்து வருகின்றது. அதன்படி நவம்பர் இரண்டாவது வாரத்தில் நாடு படிப்படியாக வழமைக்கு திரும்பும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் மொத்த மக்கள் தொகையில் 50 வீதத்துக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மற்றைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது ஒரு மகத்தான சாதனை.

அதேவேளை தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.

இதனால் நவம்பர் மாதத்தின் 2ஆவது வாரத்தில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பமுடியும்.

ஆயினும் மக்கள் தொடர்ந்தும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தற்போதைய கொரோனா பரவல் குறைவடையும் சூழலை தொடர்ந்து பராமரித்து பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....