tamilnaadi 93 scaled
இலங்கைசெய்திகள்

வெடுக்குநாறிமலையில் கஜேந்திரன் எம்.பிக்கு இரவில் நடந்தது என்ன..!

Share

வெடுக்குநாறிமலையில் கஜேந்திரன் எம்.பிக்கு இரவில் நடந்தது என்ன..!

வவுனியா வெடுக்குநாறி மலையில் நேற்றையதினம் சம்பவித்த சம்பவம் தமிழர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.

வெடுக்குநாறிமலை ஆலயத்தில் நேற்றையதினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீது பொலிஸார் தாக்கியுள்ளனர்.

இது மட்டுமன்றி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற மரியாதையை அவருக்கு பொலிஸார் கொடுத்திருக்கவில்லை.

இதுமட்டுமன்றி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனை தாக்கி, பொலிஸார் கைது செய்ய முயன்றதுடன், அவர் நாடாளுமன்ற உறுப்பினர் என தெரியவந்ததையடுத்து, அவரை தூக்கிச் சென்று ஆலய முன்றலில் போட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.

வெடுக்குநாறிமலையில் நேற்றையதினம் இடம்பெற்ற பூஜை நிகழ்வுகளின்போது மாலை ஆறு மணியுடன் அனைத்து வழிபாடுகளையும் முடித்துவிட்டு செல்லுமாறு தெரிவித்திருந்தனர்.

இருப்பினும் ஆறு மணிக்கு பின்னரும் வழிபாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது பொலிஸார் இவ்வாறான அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.

இது மட்டுமன்றி மாலை வேளையில் குடிநீருடன் ஆலயத்திற்கு உழவு இயந்திரம் வந்தபோது அந்த வாகனம் காட்டுப் பகுதியில் விபத்துக்குள்ளானதில். அதில் பயணித்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 24
செய்திகள்உலகம்

ஈரான் போர் நிறுத்தம் கோருகிறது: ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் புதிய தலைமை (New Regime) அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கோரியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாளை நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: 24 மணி நேரப் போராட்டத்திற்கு GMOA அழைப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் தழுவிய ரீதியில் நாளை (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை...

Untitled 22
செய்திகள்இந்தியா

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இந்தியாவில் ஏடிஎஃப் மற்றும் வர்த்தக எரிவாயு விலைகள் உயர்வு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி செலவுகள் அதிகரித்துள்ள...

Untitled 21
செய்திகள்உலகம்

வானில் இன்று தோன்றும் ‘இளஞ்சிவப்பு நிலவு’: 50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கான மனிதப் பயணம் தொடக்கம்!

புதிய வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் வகையில், ஏப்ரல் மாதத்தின் முதல் முழு நிலவான ‘இளஞ்சிவப்பு...