3 5 scaled
இலங்கைசெய்திகள்

தேசபந்து தென்னகோனுக்கு எதிராக உயர் நீதிமன்றில் மனு

Share

தேசபந்து தென்னகோனுக்கு எதிராக உயர் நீதிமன்றில் மனு

தேசபந்து தென்னகோன் இலங்கையின் பொலிஸ் மா அதிபராக செயற்படுவதைத் தடுக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இலங்கை பொலிஸ் படையில் எந்தவொரு பதவியையும் வகிக்க தகுதியற்றவர் என அறிவிக்குமாறு கோரி, ஐக்கிய மக்கள் சக்தியுடன் உடன் இணைந்த ஊழல் எதிர்ப்பு இயக்கம் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.

ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் அழைப்பாளர் நிரோசன் பாதுக்க மற்றும் குழு உறுப்பினர் ஆனந்த பாலித ஆகியோர் தமது மனுவில் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள், தேசிய பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர்கள் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரை பெயரிட்டுள்ளனர்.

மேலும், கடந்த பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி ஜனாதிபதியினால் தேசபந்து தென்னகோன் பொலிஸ் அதிபராக நியமிக்கப்பட்டமை, சட்ட விதிகளுக்கு முரணானது மற்றும் அரசியலமைப்பு விதிகளை மீறும் செயலாகும் என மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...